வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், தனக்கு எதிரிகள் இல்லை என்று முதலமைச்சர் கூறியதை தெரிவித்த விஜய், அப்போது எதற்கு கரூர் விஷயத்தில் தன்மீது பழி போட்டீர்கள் என்ற கேள்வி எழுப்பினார்.
உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசி இருப்பீர்களா என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் உங்களுக்கு நண்பர்கள் என்றால் எதற்கு எங்கள் கூட்டத்திற்கு அனுமதி கூட கொடுக்க மாட்டீர்கள் என்று கேட்டார். இந்த நிலையில், திமுக மூத்த தலைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் விஜய் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நான் தான் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் நான் என சொல்கிறார்.தன்னை சுற்றி தான் தமிழ்நாடு இயங்குகிறது என்ற மனநிலையில் விஜய் இருக்கிறார் என்று கூறினார். 2009ல் இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது, நடிகர்கள் எல்லாரும் சேர்ந்து நிதி திரட்டினார்கள் என்றும் சாதாரண திரைத்துறையினர் கூட 5,000 ரூபாய் கொடுத்தார்கள்., ஆனால் தம்பி விஜய் கொடுத்தது வெறும் 500 ரூபாய் என்று தெரிவித்தார். இதுதான் இனப்பற்றா? இதற்கு தான் தமிழ்நாடு உங்கள் பின்னாடி நிற்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??
நண்பர் என சொல்லிவிட்டு கரூர் சம்பவத்தில் பழிபோட்டது ஏன் விஜய் கேட்டதற்கு திமுக மூத்த தலைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பதில் கொடுத்தார். கொலைகாரன கொலைகாரன்னு தான் சொல்ல முடியும் என்றும் நண்பர் அப்படின்றதால விட்டு விட முடியுமா எனவும் கேட்டுள்ளார். தன் உறவினரே ஆனாலும் நண்பரே ஆனாலும் தண்டனை வாங்கி கொடுப்பவர் தான் அரசன் என்று கூறிய அவர், அந்த வகையில் எங்கள் முதல்வர் சரியாக தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீய சக்திக்கு END CARD… என் ஆட்சி எப்படி இருக்கும் தெரியுமா? பக்காவாக லிஸ்ட் போட்ட விஜய்..!!