பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் கடந்த சில வாரங்களாக பெரியளவில் வெடித்தது. அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். கடந்த மாதம் நடந்த பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் கூட இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளவில்லை. மேலும் அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

தந்தை, மகன் இருவரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தனித்தனியாக கூட்டினர். அன்புமணியின் கூட்டத்திற்கு வந்தவர்கள் ராமதாஸ் கூட்டத்திற்கு போகவில்லை. கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்படும் சூழல் உருவாகி இருப்பது மூத்த நிர்வாகிகளுக்கு கவலையும், விரக்தியும் அடைந்துள்ளனர். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென, அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையும் படிங்க: யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!
அன்புமணியும், சௌமியாவும் காலில் விழுந்து கதறியதாலே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக கூறினார். மேலும் அன்புமணி தனது தாயார் மீது பாட்டிலை கொண்டு வீசினார், அவர் மேல் படவில்லை என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அன்புமணியின் ஆதரவாளர்களாக அறியப்படும் பாமக நிர்வாகிகளையும் அந்த பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டு வருகிறார்.

அன்புமணி ராமதாஸ் தனது தந்தை ராமதாஸை எதிர்த்தோ, பழித்தோ பேசவில்லை. ராமதாஸ் தான் நமது வழிகாட்டி என்று பேசினார். அதேசமயம் தன்னை யாரும் கட்சியிலிரிந்து நீக்க முடியாது. பொதுக்குழு தான் என்னை நியமித்தது. என் பதவியை நீக்க பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் இருக்கிறது, வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பேசினார். அது மட்டுமல்லாமல் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டு ஆலோசனை நடத்தினார்.
இச்சூழலில், இன்று தைலாபுரத்தில் வீட்டுக்கு சென்ற அன்புமணி, தந்தை ராமதாசை சந்தித்து பேசி இருக்கிறார். வெளியே வந்த அவரிடம் சமதானம் ஆகிவிட்டீர்களா என செய்தியாளர்கள் கேட்க, கார் கண்ணாடியை கூட திறக்காமல் வணக்கம் சொல்லியபடி சென்றார் அன்புமணி. அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைலாபுரம் தோட்டத்திற்கு ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ஒரே காரில் வந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸை இருவரும் சந்தித்து சுமார் 3 மணிநேரம் பேசினார்.

அதிமுகவும் பாஜவும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமதாஸை சமாதனப்படுத்தி பாமகவை கூட்டணியில் ஐக்கியப் படுத்தவே இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக யூகங்கள் பரவின. ஆனால், அதற்காக வரவில்லை என்று குருமூர்த்தி கூறினார். பா.ஜ.,வுக்காக பேச வரவில்லை. நீண்ட கால நண்பர் ராமதாஸ். எனது நீண்ட கால நண்பர் ராமதாசை சந்தித்து பேசினேன்.வேறு ஏதும் இல்லை. நட்பு ரீதியாக சந்தித்து நீண்ட நேரமாக பேசினேன். பா.ஜ,வுக்காக நான் தைலாபுரம் வரவில்லை. நண்பர் என்ற முறையில் சந்திக்க வந்தேன் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.
இதையும் படிங்க: அடுத்தது தமிழகத்தில் நம் ஆட்சி தான் நடக்க வேண்டும்.. ஒரே போடு போட்ட அன்புமணி ராமதாஸ்..!