பொள்ளாச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், பல பெண்கள் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டனர். இந்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்ட விவரங்கள் தெரிய வந்து உள்ளன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் இருவர் தற்போது இழப்பீடு பெற விண்ணப்பித்து உள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கில் குற்றவாளிகள் அபகரித்த தங்க நகைகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், நீதிமன்றம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருந்தது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..!
அதன்படி, ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. முதல் பெண்ணுக்கு 2 லட்சம், இரண்டாவது பெண்ணுக்கு 15 லட்சம், மூன்றாவது பெண்ணுக்கு 10 லட்சம், நான்காவது பெண்ணுக்கு 10 லட்சம், ஐந்தாவது பெண்ணுக்கு 8 லட்சம், ஏழாவது பெண்ணுக்கு 15 லட்சம், எட்டாவது பெண்ணுக்கு 25 லட்சம் என இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் தற்போது மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற விண்ணப்பித்து உள்ளனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்தது. தற்போது, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் இருவர் விண்ணப்பித்து இருப்பது, மற்ற பாதிக்கப்பட்ட பெண்களும் விரைவில் விண்ணப்பித்து தங்களுக்குரிய இழப்பீட்டைப் பெறுவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.
இந்த சம்பவம், பாலியல் வன்கொடுமையின் கொடூரத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும், கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் என, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

பொள்ளாச்சி வழக்கில் கடந்த 13-ம் தேதி கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டுமல்லாமல் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. அத்தகைய நியாயத்துக்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரண தொகை ரூ.85 லட்சத்துக்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!