திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மங்கலப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 40) இவர் P A C L என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக பணியாற்றி வந்துள்ளார். இவர் நத்தம் பகுதியில் உள்ள சிறுகுடி, சாணார்பட்டி, கோபால்பட்டி, உட்பட பல கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து கூடுதலாக வட்டி வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூல் செய்து நிதி நிறுவனத்தில் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்த பொதுமக்கள் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். மேலும் பணம் தர காலதாமதம் ஆனதால் பணம் கொடுத்தவர்கள் பச்சையம்மாளை மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியவில்லை என்ற மன வேதனையில் இன்று 24.06.25 மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பச்சையம்மாள் தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
இதையும் படிங்க: சிபிஎம் - இந்து முன்னணியினர் குடுமிப்பிடி சண்டை! மாறி மாறி தாக்கிக் கொண்டதால் போலீஸ் திணறல்!

தீயின் தாக்கம் தாங்க முடியாமல் அலறிக் கொண்டே ஓடி வந்ததை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பச்சையம்மாளின் உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மிகவும் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பச்சையம்மாள் தீவிர தீ காய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கர்ப்பிணியை கை நீட்டி அடித்த காவலருக்கு நேர்ந்த நிலை... பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...!