• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... ரெட்டை இலை சின்னம் விவகாரம்... ஆழம் பார்க்க போட்டியிடும் அதிமுக..

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் முறையாக நடக்காது என்று தெரிவித்து போட்டியிடாமல் ஒதுங்கிய அதிமுக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Kathir Wed, 08 Jan 2025 11:35:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    erode-east-by-election-red-leaf-symbol-issue-aiadmk-con

    இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் எண்ணத்தை தெரிந்து கொள்வதற்காக ஆழம் பார்க்க போட்டியிடலாம் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    அதிமுக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக பிளவுபட்டாலும் ஓபிஎஸ்ஸால் பெரும்பாதிப்பை உண்டு பண்ண முடியாத, நிலையில் 11 எம்எல்ஏக்கள் உடன் ஒதுங்கினார். அதன் பின்னர் சசிகலா முதல்வராக வர வாய்ப்பிருந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக அவர் கூவத்தூரில் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக நியமித்து சிறைக்கு சென்றார். அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் பாஜகவின் ஆதரவு தேவை என்கிறதன் நிலையில் பொதுச்செயலாளர் சசிகலாவையும், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி அணியினர் டெல்லி மேலிட அழுத்தம் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டனர்.

    aiadmk
    11 எம்எல்ஏக்கள் உடன் ஒன்றும் இல்லாமல் போன ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற உயரிய பதவிக்கும், துணை முதல்வர் என்கிற பதவியிலும் அமர்த்தப்பட்டார். அதன் பின்னர் டெல்லி மேலிடம் ஓபிஎஸ் மூலம் அதிமுகவில் பல குழப்பங்களை விளைவித்தது. வேண்டாத விருந்தாளியாக பாஜகவால் திணிக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ ஒதுக்கியே வைத்திருந்தனர் அதிமுகவின் பிற தலைவர்கள். இந்த நிலையில் தொடர்ந்து ஓபிஎஸ் மூலம் கட்சிக்குள் பிரச்சனை வர, கட்சி முறையாக செயல்பட முடியாமல் தடுமாற்றத்தை சந்தித்தது.

    முதல்வர் வேட்பாளருக்கு நான் தான் நிற்பேன் என ஓபிஎஸ் போட்டியிட்டு பின்  ஒதுங்கினார், தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலுக்குப்பின் மோதல் போக்கு அதிகரித்தது திமுகவிற்கு பகிரங்கமாக ஓபிஎஸ் சப்போர்ட் செய்தது அதிமுகவினரிடையே கோபத்தை வரவழைத்தது. அதன் பின்னர் கட்சியின் பைலாவை மீண்டும் திருத்தி பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட்ட நிலையில் பொதுச் செயலாளராக நான் தான் நிற்பேன் என ஓபிஎஸ் பிடிவாதம் பிடிக்க, பின்னர் அதிலிருந்தும் ஓபிஎஸ் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட சிலர் தனி கோஷ்டியாக செயல்பட்டனர்.  பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது இந்த பொதுக்குழுவை தடுத்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு அதிமுகவின் பெரும்பான்மை பெற்ற  எடப்பாடி அணிக்கு சாதகமாக வந்தது. பின்னர் பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின் பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.  அவைத்தலைவர் தேர்வு செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவை தலைவர் தேர்வு சரியானது அவர் பொது குழுவை கூட்டலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சுவாரஸ்யங்கள்... முந்தி கொண்ட காங்கிரஸ்... கோபத்தில் திமுக.... யோசிக்கும் அதிமுக..

    aiadmk

    பின்னர் பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் 98 சதவீதத்திற்கும் மேலான பொதுக்குழு  உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு தேர்வு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கே போகவில்லை. பின்னர் பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டது செல்லும், ஓபிஎஸ்சை கட்சியை விட்டு நீக்கியதும் செல்லும் என்று தீர்ப்பு வந்தது. 

    அதன் பின்னரும் ஓபிஎஸ் தொடர்ந்து தன்னுடைய முயற்சியில் சற்று மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, ஓபிஎஸ், டிடிவி என அனைவரும் ஒன்று சேர்ந்தனர். ஆனாலும் சசிகலா இந்த அணியில் இணையாமல் தனித்து செயல்பட்டு வருகிறார். கே.சி.பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் தேர்வுகளுக்கு வழக்கு தொடர்ந்து உள்ளார். இவைகள் ஒருபுறம் இருக்க ரெட்டை இலை சின்னத்தை அதிமுகவிற்கு வழங்கக் கூடாது என்ற வழக்கு நீதிமன்றத்தில் ஒருவரால் தொடரபட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அதுகுறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இந்த நிலையில் சமீப காலமாக திமுக ஆதரவு ஊடகங்கள் மூலம், இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்காது, இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை சின்னத்தை வைத்து அதிமுக பாஜக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-க்கு வழங்கி பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும், என்றெல்லாம் கதைகள் நாளுக்கு நாள் கட்டிவிடப்படுகின்றன. ரெட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதன் மூலம் இரட்டை இலை சின்னம் குறித்த தேர்தல் ஆணையம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஏனென்றால் இதே ஈரோடு இடைத்தேர்தலில் தான் ஓபிஎஸ்- எடப்பாடி அணி தனித்தனியாக போட்டியிட்டது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வியும் எழுந்தது. அதிமுக யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நிலுவையிலிருந்தது. அந்த நேரத்தில் அதிமுக எடப்பாடி அணியின் சார்பில் தென்னரசு போட்டியிட்டார். பன்னீர் செல்வம் அணியின் சார்பில் செந்தில் முருகன் போட்டியிட்டார்.

    aiadmk
    இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுகவின் எடப்பாடி அணி உச்சநீதிமன்றத்தை நாடியது, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு சென்ற பொழுது, அதிக பொதுக்குழு உறுப்பினர்களை யார் வைத்துள்ளார்களோ அவர்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்,  அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்  அந்த கடிதங்களை வாங்கி தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளவர்களுக்கு இரட்டை இலையை ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டது. அதன்படி அதிக எண்ணிக்கை பொதுக்குழு உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்ட எடப்பாடி அணிக்கு இரட்டை இலை கிடைத்தது. 
    இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பல்வேறு கதைகள் கட்டப்பட்டு வரும் நிலையில், இரட்டை இலை சின்னம் பிரச்சனை மீண்டும் ஊதி பெரிதாகப்படும் நிலையில், மத்திய அரசு இதில் அதிமுகவிற்கு இடையூறு விதிக்கலாம் என்கிற நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பயன்படுத்தி ஏற்கனவே வாங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை அதிமுக பெற்றால் அதிமுகவிற்கான பெரிய அங்கீகாரமாக அது மாறும். 

    இரட்டை இலை சின்னம் குறித்த பலரது புனை கதைகள் ஒன்றும் இல்லாமல் போய்விடும். 2026 தேர்தலில் அதிமுகவிற்கு இது சாதகமாக இருக்கும், கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவு எடுக்க இது சாதகமாக அமையும் என்று அதிமுக தலைமை கருதுகிறது. இதனால் வருகின்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை குறித்த முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை வாங்குவதற்காக அதிமுக கட்டாயம் போட்டியிடும் என தெரிகிறது.

    இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் வேக, வேகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்கள் அகற்றம் - பரபரக்கும் ஈரோடு! 

    மேலும் படிங்க
    இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!

    இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!

    இந்தியா
    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    உலகம்
    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை

    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை

    இந்தியா
    உங்க கணவர் ஆண்மையற்றவர்... முதலிரவில் அண்ணியாரை கூட்டாக அனுபவித்த கொழுந்தனார்கள்..!

    உங்க கணவர் ஆண்மையற்றவர்... முதலிரவில் அண்ணியாரை கூட்டாக அனுபவித்த கொழுந்தனார்கள்..!

    குற்றம்
    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    இந்தியா
    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    இந்தியா

    செய்திகள்

    இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!

    இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!

    இந்தியா
    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    நம்ப வைத்து துரோகம்! இது வெளிப்படையான ஆக்கிரமிப்பு தான்…கொக்கரிக்கும் பாக்.பிரதமர்!

    உலகம்
    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை

    துள்ளும் பாக்...துரத்தி அடிக்கும் இந்தியா! ராணுவ மையத்தில் நுழைந்த மர்ம நபருடன் கடும் துப்பாக்கிச் சண்டை

    இந்தியா
    உங்க கணவர் ஆண்மையற்றவர்... முதலிரவில் அண்ணியாரை கூட்டாக அனுபவித்த கொழுந்தனார்கள்..!

    உங்க கணவர் ஆண்மையற்றவர்... முதலிரவில் அண்ணியாரை கூட்டாக அனுபவித்த கொழுந்தனார்கள்..!

    குற்றம்
    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...! 

    இந்தியா
    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share