கால்பந்து உலகின் முடிசூடா மன்னனும், 2022 உலகக் கோப்பை சாம்பியனுமான அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அர்ஜென்டினா தேசிய அணிக்கான அவரது 21 ஆண்டுகால பொற்கால சகாப்தம் நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு அர்ஜென்டினா தேசிய அணியில் அறிமுகமான 39 வயதான லியோனல் மெஸ்ஸி, தனது தாய்நாட்டிற்காக 207 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார். 2021 மற்றும் 2024 கோபா அமெரிக்கா சாம்பியன்ஷிப் பட்டங்கள், 2022 ஃபைனலிசிமா, மற்றும் கத்தாரில் நடைபெற்ற 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணிக்குத் தனது அபார தலைமையின் கீழ் வென்று கொடுத்து, உலக கால்பந்து வரலாற்றில் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக உயர்ந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரிலும் அர்ஜென்டினா அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற மெஸ்ஸி, தற்போது சர்வதேச அரங்கிலிருந்து விடைபெறும் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் (MLS) தொடரில் இன்டர் மியாமி கிளப் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 15 வயதில் தரமான சம்பவம்! 57 ஆண்டு பழைய துலீப் கோப்பை சாதனையை முறியடித்தார் வைபவ் சூரியவன்ஷி!
கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸியின் சர்வதேச ஓய்வு அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களைக் கண் கலங்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: ஷமியின் சாதனை வேட்டை.. 900 விக்கெட்டுகள் கிளப்பில் இணைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!!