படம் வெளியாகி பல வாரங்களை கடந்து இன்றும் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி பட்ட படம் இன்றைய காலத்தில் தேவை என அனைவரும் கூறும் வகையில் வெளியாகியுள்ள படம் தான், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி'.

இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் பிரச்சனையை இலங்கையுடன் ஒப்பிட்டு பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல்..!

24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். படம் வந்ததிலிருந்து பலரது பாராட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தை இதுவரை அமைச்சர் மா. சுப்ரமணியன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இயக்குனர் ராஜமௌலி, நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, என படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், படம் பார்த்த அனைவரும் படத்தை நல்லவிதமாக பேசிவந்தாலும், படத்தில் வந்த மம்முட்டியான் பாடலுக்கு ஆடிய போஷனாக இருந்தாலும், தனது அப்பா படும் கஷ்டங்களை குறித்து மகன் பேசும் கருத்துக்களாக இருக்கட்டும், யோகிபாபு காமெடி, சசிகுமாருக்காக மொத்த மக்களும் உதவுவது என அனைத்தும் படத்தின் பிளஸ் ஆக இருந்தாலும், சர்ச்சில் எனது அம்மா இறந்த பின்பு "தம்பி சாப்டியா" என கேட்ட ஒரே மனிதன் இவர் தான். வாழக்கை முழுவதும் உங்களை மறக்க மாட்டேன் சார் என இளைஞர் அழுவது அனைவரது உள்ளத்தையும் கரைத்தது.

இப்படி பட்ட படத்தை பார்த்த நடிகர் நானி உணர்ச்சி வசப்பட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "எளிமையான மனதை தொடும் வகையில் எடுக்கப்பட்ட சிறந்த படம் தான் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தை ஒரு ரத்தினமாக மாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகளாகிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீர் பிரச்சனையை இலங்கையுடன் ஒப்பிட்டு பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல்..!