தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ள ரகுல் பிரீத் சிங், தற்போது தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களால் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளார்.

பூ வடிவமைப்புகள் கொண்ட அழகிய உடையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வேகமாக வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: உலக அரங்கில் மீண்டும் ஒலித்த இந்தியாவின் குரல்..!! ஏ.ஆர். ரஹ்மானுக்கு 'Academy of Achievement Award'.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, அயலான் மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையே பரிச்சயமான முகமாக விளங்கிய ரகுல் பிரீத் சிங், தெலுங்கு சினிமாவில் ஆரம்ப காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர்.

பின்னர் பாலிவுட் திரைப்படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி, பல்வேறு மொழிகளில் நடித்து பான்-இந்தியா நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய படங்களில் அவரின் பங்களிப்பு குறைந்திருந்தாலும், பாலிவுட் திரையுலகில் அவர் தொடர்ந்து பல திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.

கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலிருந்து வணிக ரீதியான திரைப்படங்கள் வரை பல்வேறு வகை படங்களில் நடித்து வரும் அவர், தனது நடிப்பு திறமையாலும், திரை தோற்றத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரகுல் பிரீத் சிங் கடந்த சில ஆண்டுகளில் முக்கிய மாற்றங்களை சந்தித்துள்ளார். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பக்னானி உடன் நீண்டகால காதல் உறவுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டது திரையுலகில் பெரும் கவனத்தை பெற்ற நிகழ்வாக அமைந்தது. இந்த திருமணம் பல திரையுலக பிரபலங்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படிங்க: கோவாவில் பிரம்மாண்ட ரிசார்ட்டில் நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்..!! சென்னையில் விரைவில் ரிசப்ஷன்.. ரெடியாகும் ரசிகர்கள்..!