இன்று கபடி போட்டிகளை பார்த்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரே படம் என்றால் அதுதான் 2009ம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" இந்த திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இந்த படத்தை பற்றி நினைவு கூற வேண்டுமானால் காமெடி நடிகர் சூரியை தான் முதலில் நினைவு கூற வேண்டும்.

அந்த அளவிற்கு பரோட்டோ காமெடியில் இந்த படத்தை அழகாக மக்கள் மனதில் கொண்டு சேர்த்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் கடைசியாக தனது காதலியுடன் வாழாமல் கபடி போட்டிகளத்தில் இறந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவிற்கு படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி அசத்தி இருப்பார். இதனை அடுத்து இவரது நடிப்பில் உருவான அருமையான திரைப்படம் "குள்ளநரி கூட்டம்". இந்த படத்தில் தனது காதலிக்காக போலீசாக மாற நினைக்கும் விஷ்ணு ஷிஷால், தனது அப்பாவுக்கு தெரியாமல் போலீஸ் ட்ரைனிங் சென்று அங்கு நன்றாக தனது திறமையை காண்பித்து இருப்பார்.
இதையும் படிங்க: வெள்ளை நிற உடையில் கிளாமரின் உச்சத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங்..! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!

ஆனால் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் வேறு சிலரை வேலைக்கு எடுக்கும் செய்தி தெரிந்த விஷ்ணு, அவரது நண்பர்களுடன் இணைந்து ஊழல் அதிகாரிகளை மீடியாக்கு முன்பாக நிறுத்தி மீண்டும் தனது வேலையை வாங்குவர். ஆனாலும் இப்படத்தில் இவரது காதல் போஷன் அல்டிமேட்டாக இருக்கும். இந்த படமும் வெண்ணிலா கபடி குழுவும் இவரை மக்கள் மனதில் கதாநாயகனாக பதியவைத்த படம் எனலாம். இப்படி இருக்க, இவரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடிக்க வைத்த படம் என்றால் மூன்று படங்களை சொல்லலாம். அதில் முதலாவது போட்டோ எடுத்தால் மறித்து போவார்கள் என நம்பும் ஊர்மக்களை ஏமாற்றி அந்த ஊர் தலைவரின் மகளை திருமணம் செய்யும் படம் தான் "முண்டாசுப்பட்டி".

இதனை அடுத்தது அனைவரது மனதிலும் மிகப்பெரிய திகிலை ஏற்படுத்திய அட்டகாசமான படமான "ராட்சசன்" திரைப்படம். மூன்றாவதாக மனைவியுடன் மல்யுத்தமான குஸ்தி போடும் படமான "கட்டா குஸ்தி". இந்த மூன்று படங்களும் மக்கள் மனதில் அவரை நிலைநிற்க செய்தது.

இந்த சூழலில் விஷ்ணு விஷால் இதுவரை, வெண்ணிலா கபடி குழு, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, தாக்க தாக்க, இன்று நேற்று நாளை, மாவீரன் கிட்டு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், இன்று நேற்று நாளை 2, மோகன் தாஸ், காடன், கட்டா குஸ்தி, ஃப்.ஐ.ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்), லால் சலாம், போடா ஆண்டவனே என் பக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இப்படி சினிமாவில் கலக்கி வரும் விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இருந்தபோதிலும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணங்களால் விஷ்ணுவும், ரஜினியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்குவாஷ் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விஷ்ணு விஷால். இவர்களது பெயருக்கு ஏற்ப இவர்களது ஜோடி பொருத்தமும் அமோகமாக இருந்தது. இந்நிலையில், இவர்கள் இருவரது காதலுக்கு அடையாளமாக இவர்களுக்கு சமீபத்தில் மகள் பிறந்திருக்கிறாள். அதுதொடர்பான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த விஷ்ணு அதில், 'எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். ஆர்யன் அண்ணன் ஆகிவிட்டான்.

எங்களுக்கு நான்காம் ஆண்டு திருமண நாள் என்பதால் அந்த நாளில் எங்கள் குடும்பத்தில் தேவதை பிறந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் வாழ்த்தும், ஆசீர்வாதமும் என் மகளுக்கு தேவை" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த சூழலில், விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு பிரபல பாலிவுட் நடிகரான அமிர்கான் மடியில் அமரவைத்து பெயர் சுட்டு விழா நடைபெற்றுள்ளது. விஷ்ணு விஷாலின் மகளுக்கு 'மிரா' என பெயர் சூட்டினார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால் அதில், " எங்கள் மிராவை அறிமுகப்படுத்துகிறோம்...எங்கள் குழந்தைக்கு பெயரிட ஹைதராபாத் வரை வந்ததற்காக #ஆமீர்கான் ஐயாவுக்கு ஒரு பெரிய நன்றி. மிரா நிபந்தனையற்ற அன்பையும் அமைதியையும் குறிக்கிறது. இதுவரை ஆமீர் கான் சாருடன் நான் செய்த பயணம் ஒரு மாயாஜாலமானது.. " என பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கடை திறப்புக்கு வந்த கீர்த்தி சுரேஷ்..! TVK.. TVk....என கோஷம் போட்ட ரசிகர்கள்..!