சமீப நாட்களாக தமிழ் சினிமா மற்றும் சமூக வலைதள உலகில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் ஒரு பெயர் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜன் தான். சமையல் கலைஞராகவும், நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர், தற்போது தனது தொழில் சாதனைகளைக் காட்டிலும் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய சர்ச்சைகளால் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்.
குறிப்பாக, அவரது இரண்டாவது மனைவி என கூறப்படும் ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து வெளியிட்டு வரும் சமூக வலைதள பதிவுகள், இந்த விவகாரத்தை நாளுக்கு நாள் மேலும் சூடுபிடிக்கச் செய்து வருகின்றன. குறிப்பாக மாதம்பட்டி ரங்கராஜன் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழகமெங்கும் வீடு வீடாக அறிமுகமானவர். அவரது எளிமையான பேச்சு, இயல்பான உடல்மொழி மற்றும் சமையல் திறமை ஆகியவை அவருக்கு பெரும் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொடுத்தன. இதனைத் தொடர்ந்து ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம், நடிகராகவும் தன்னை நிரூபிக்க முயற்சி செய்தார். தொழில்முறையில் அவர் பெற்ற இந்த உயர்வுக்கு இணையாக, அவரது குடும்ப வாழ்க்கை எப்போதும் அமைதியாக இருந்ததாகவே ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

இப்படி இருக்க முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், அவர்களுக்கான இரண்டு குழந்தைகள் என ஒரு நிலையான குடும்ப வாழ்க்கை இருந்த நிலையில், பின்னர் ஜாய் கிரிஸில்டாவுடன் ஏற்பட்ட உறவுதான் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு வரும் பதிவுகள், இந்த உறவு சாதாரணமான ஒன்றல்ல என்றும், அதில் திருமணம், வாக்குறுதி, நம்பிக்கை, கர்ப்பம், பின்னர் தனிமை என பல்வேறு உணர்ச்சிப் பூர்வமான கட்டங்கள் இருந்ததாகவும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுட்டிக்காட்டுகின்றன.
இதையும் படிங்க: சொத்தை கேட்ட மனோஜ்.. கோபத்தில் எல்லைமீறிய முத்து..! திடீரென காணாமல் போன அண்ணாமலை.. பரபரப்பில் சிறகடிக்க ஆசை..!
இந்த நிலையில் இன்று ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு, வழக்கமான சாட் போஸ்ட் போல இல்லாமல், ஒரு சவால் விடும் வகையிலேயே இருந்தது. அதில் “என் குழந்தைக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன்” என்ற வாசகத்துடன் அவர் பகிர்ந்த பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பதிவுக்கு முன்பாகவே, மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை குடும்பத்துடன் சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அந்த பதிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்குள் ஜாய் கிரிஸில்டாவின் இந்த பதிவு வந்தது என்பதே, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், விவகாரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளன. “மாதம்பட்டி ரங்கராஜுக்கு இரண்டு பொண்டாட்டி, மூன்று மகன்கள். இதை யாராலும் மாற்ற முடியுமா? முடியாது. இது அவர் சாகும் வரை அழிக்க முடியாத உண்மை” என அவர் பதிவிட்டுள்ள வாசகங்கள், இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “குழந்தையின் சாபம் சும்மா விடுமா?” “வினை விதைத்தவன் வினையை அறுப்பான்” போன்ற கடுமையான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜாய் கிரிஸில்டா முன்பு வெளியிட்ட பதிவுகளில், மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ பரிசோதனைக்கு வராமல் தவிர்த்து வருகிறார் என்றும், விசாரணைகளில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இந்த விவகாரம் வெறும் தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்பதை காட்டும் விதமாக, அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில், மாதம்பட்டி ரங்கராஜன் காவல் நிலைய விசாரணைக்கும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரங்கராஜன் தரப்பிலிருந்து இதுவரை விரிவான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விவகாரத்திற்கு மேலும் ஒரு திருப்பமாக, முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் வெளியிட்ட பதிவு அமைந்துள்ளது. அவர் நடிகர் ஷாருக்கானை குடும்பத்துடன் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டதும், சமூக வலைதளங்களில் “இது ஒரு டைமிங் போஸ்டா?”, “ஜாய் கிரிஸில்டாவின் பதிவுகளுக்கு பதிலாகவே இது வெளியிடப்பட்டதா?” போன்ற கேள்விகள் எழத் தொடங்கின.
குறிப்பாக, அந்த புகைப்படங்கள் வெளியான உடனேயே ஜாய் கிரிஸில்டா தனது கடுமையான பதிவுகளை வெளியிட்டது, இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும், ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் தன்னுடைய குழந்தை ராகா ரங்கராஜுடன், மாதம்பட்டி ரங்கராஜனின் சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றதாகவும் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவும் பெரும் விவாதத்தை கிளப்பியது. “குழந்தையின் அடையாளம்”, “தந்தையின் பொறுப்பு” போன்ற விஷயங்களை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, இந்த விவகாரத்தின் மையமாக குழந்தையின் எதிர்காலம் தான் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தற்போது இரண்டு பிரிவுகளாக விவாதிக்கப்படுகிறது.
ஒரு தரப்பு, இது முழுக்க முழுக்க தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், பொதுமக்கள் இதில் தலையிட வேண்டாம் என்று கூறுகிறது. மற்றொரு தரப்பு, ஜாய் கிரிஸில்டா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகுந்த தீவிரம் கொண்டவை என்பதால், அவற்றை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என வலியுறுத்துகிறது. குறிப்பாக, குழந்தை தொடர்பான விஷயங்களில் சட்டரீதியான தெளிவும் பொறுப்பும் அவசியம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜன் தரப்பிலிருந்து தெளிவான விளக்கம் அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகாததால், சர்ச்சை மேலும் நீடித்து வருகிறது.

ஜாய் கிரிஸில்டாவின் ஒவ்வொரு பதிவும் புதிய கேள்விகளை எழுப்ப, சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில், சமையல் கலைஞராகவும், நடிகராகவும் ரசிகர்களின் மனதில் நல்ல பெயரை பெற்றிருந்த மாதம்பட்டி ரங்கராஜன், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய சர்ச்சைகளால் கடும் விமர்சனங்களையும் கவனத்தையும் எதிர்கொண்டு வருகிறார்.
இந்த விவகாரம் எப்போது, எப்படிப் முடிவுக்கு வரும், சட்டரீதியாக எந்த திசையில் நகரும், உண்மை என்ன என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை, பொதுமக்களும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 2026 தளபதி கச்சேரி ஸ்டார்ட் தான் போலயே..! மலையாள நடிகரின் செயலே இப்படி ஆதாரமாக மாறிடுச்சே..!