சில நாட்களாகவே நடிகை சமந்தாவின் வாழ்வில் பல ஆச்சரியமான சம்பவங்கள் நடந்து வருகிறது என்றே கூறலாம். அந்த வகையில் தற்பொழுது பல நாடுகளுக்கு சோலோவாக பயணம் செய்து வரும் அவருக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக கிடைத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகையாக இருந்த சமந்தா தற்பொழுது தயாரிப்பாளராகவும் களமிறங்கி படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து மீண்டும் தன்னை முன்னனி நடிகையாக மாற்றி வருகிறார். இப்படி தனது சினிமா கெரியரில் யாராலும் அசைக்க முடியாதபடி இருந்த நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலகி இருக்க காரணமே நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தான் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.

இப்படிப்பட்ட இவர்கள் இருவரது வாழ்வில் என்ன நடந்தது என பார்த்தால், நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். இந்த சூழலில் நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யா தரப்பில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுத்த நிலையில் அதனை சமந்தா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சமந்தாவுடனான பிரிவுக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்பின் முதலில் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று, ரூ.200 கோடி பட்ஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த இவர்களது திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது.
இதையும் படிங்க: துபாயையே மிரள விட்ட நடிகை சமந்தா..! செல்பி எடுக்க படையெடுத்த கூட்டம்..!

இதனால் மனமுடைந்து போன சமந்தா, இனி தன் வாழ்வில் யாருக்கும் இடமில்லை என்று சொல்லி மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து இன்று ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சமந்தாவின் எக்ஸ் கணவரான நாகசைய்தன்யாவின் சகோதரனுக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி, நாகர்ஜூனாவின் இளையமகனான அகில் அக்கினேனிக்கு அவரது நீண்ட நாள் காதலியான ஸைனாப்பை என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இதில் சமந்தாவை அழைக்கவில்லையே என பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நாக சைதன்யாவை காதலித்தபோது தனது உடம்பில் காதலின் அடையாளமாக குத்தப்பட்ட டாட்டூகளை தொடர்ந்து நீக்கி வருகிறார் சமந்தா. அந்தவகையில் தற்பொழுது, அவர்கள் இருவரும் காதலிக்க காரணமாக இருந்த படம் தான் 'ஏ மாயா சேஷாவே'. இந்த படத்தின் பெயரை சுருக்கி ஒய்எம்சி என்ற பெயரில் சமந்தா அவரது கழுத்தின் பின்பகுதியில் டாட்டூவாக குத்தி இருந்தார். ஆனால் கல்யாண வீட்டிலே இடமில்லை என்னும் பொழுது உன் நினைவை மட்டும் நான் ஏன் சுமக்க வேண்டும் என தற்பொழுது அந்த டாட்டூவை முற்றிலுமாக அழித்துள்ளார் சமந்தா.

இதனை அவர் வீடியோவாக பதிவு செய்து அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: என்ன ட்ரெஸ் இது..! சமந்தாவின் மாடல் உடையை கண்டு வியப்பில் நெட்டிசன்கள்..!