சமீபத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விஷயம் என்றால் அதுதான் கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு 11 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நடத்திய ரெய்டு. அப்பொழுது அங்கு தனது நண்பர்களுடன் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசார் அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பிய போது நேரடியாக காவல் நிலையம் சென்று தான் போதை மருந்து உபயோகித்ததை ஒப்பு கொண்டார்.

அதே போல் தற்பொழுது தமிழகத்திலும் அரங்கேறியுள்ளது. தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் இருந்தாலும் இன்றும் தனக்கான ரசிகர்களை கொண்டு இருப்பவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தவர். 2002-ம் ஆண்டில் வெளியான "ரோஜாக் கூட்டம்" என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து தமிழகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார். இதனை அடுத்து தெலுங்குத் திரைப்படங்களில் நடித்த இவருக்கு அங்கு 'ஸ்ரீராம்' என்ற பெயரும் உள்ளது.
இதையும் படிங்க: எனக்கு உங்கள பிடிச்சிருக்கு... நடிகை கீர்த்தி ஷெட்டி பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி...!

இப்படி இருக்க, இவர் நடித்த முதல் படமான 'ரோஜாக்கூட்டம்' படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதனை அடுத்து, சினேகாவுடன் இவர் நடித்த "ஏப்ரல் மாதத்தில்" படம் அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவான "பார்த்திபன் கனவு" இவருக்கு மாபெரும் புகழை தேடி தந்ததுடன் தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருதையும் பெற்று தந்தது. இப்படி தொடர் வெற்றிகளை கண்ட இவரது அடுத்தடுத்த படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிய, 2007-ம் ஆண்டில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான "ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே" என்ற படத்தில் நடித்து மீண்டும் தனக்கான அந்தஸ்த்தை தெலுங்கு திரையுலகில் பெற்றார்.

பின்பு பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கரின் 'நண்பன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் ஜீவாவுடன் நடித்து பலரது உள்ளங்களையும் கவர்ந்தார். இப்படி இருக்க, நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டதாகவும். இதில் அதிமுக பிரமுகரான பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும். மேலும் பிரசாந்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக அவர் கூறியிருப்பதால் அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரசாந்திடம் இருந்து தான் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்கு முன்பாக ஸ்ரீகாந்திற்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்யாணமா.. எனக்கா.. நெவர்..! நடிகை சதாவுக்கு திருமணத்தை விட அதுலதான் இன்ட்ரஸ்ட்டாமா..!