தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட நடிகர் கமலஹாசன், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என ஒரு வார்த்தை சொல்ல, அது தற்பொழுது கர்நாடகாவில் பூதாகரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தற்பொழுது மொழி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்து நடிகர் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியானால் தியேட்டரை கொளுத்துவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மாறியிருக்கிறது.

இந்த பிரச்சனை எங்கு ஆரம்பித்தது என பார்த்தால், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாக தயாராக இருக்கும் தக்லைஃப் படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இப்படி இருக்க இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: மத உணர்வை புண்படுத்தும் வகையில் "பரமசிவன் பாத்திமா" படம்..! கண்டிஷன்களுக்கு பின் கிடைத்த தணிக்கை சான்றிதழ்..!

இப்படி இருக்க, இப்படத்தின் ஃபிரமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்தினம், சிம்பு, திரிஷா, கமல்ஹாசன், சிவராஜ்குமார் என பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய சிவராஜ்குமார், "நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவருக்கும் தெரியும். எனது சகோதரன் மறைவுக்கு பின் எனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். இதனால் அமெரிக்காவிற்கு என்னை அழைத்து சென்று ஆபரேஷன் செய்தனர். ஆப்ரேஷன் முடிந்த சமயத்தில் நடிகர் கமலிடம் இருந்து எனக்கு போன் வந்தது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் சரியாகவிடும் என்றார். அந்த இரண்டே வார்த்தையில் என்னை மறந்து அழ ஆரம்பித்து விட்டேன்.

உண்மையில் ஹீரோ என்றால் கமல் மாதிரி தான் இருக்கணும். கமல் என்றால் அழகு. ஒருவேளை நான் மட்டும் பெண்ணாக பிறந்து இருந்தால் கண்டிப்பாக அவரை திருமணம் செய்து இருப்பேன். இதனை நான் பலமுறை உங்கள் மத்தியில் கூறியிருக்கிறேன். ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது என் அப்பாவிடம் என்னை யார் என கேட்டார். அதற்கு அப்பா இவன் என் மகன் என்றார். அப்போது நான் கமலை பார்த்து ஒருமுறை உங்களை கட்டிப்பிடிக்கலாமா என கேட்டேன். அவரும் உடனே சம்மதித்தார். அதன்பின் மூன்று நாட்கள் நான் குளிக்கவே இல்லை. ஏனெனில் கமலின் ஆரா எனக்கு தேவைப்பட்டது. அந்தளவுக்கு நான் அவரின் வெறித்தனமான ரசிகன்" என்றார்.

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், " உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் அனைத்தும் தமிழ் மொழி மட்டும் தான். எனது குடும்பம் அனைத்தும் இங்கு தான் இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமாரும் இங்கு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது மொழி கன்னடம், ஆனால் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமானவர்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இதனை பார்த்த கர்நாடக மக்கள் கன்னட மொழியை குறித்து அவதூறாக கமல் பேசியிருப்பதாக கூறி தக் லைப் படம் வெளியிட கூடாது என பிரச்சனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களை தீ வைத்து எரித்து விடுவோம் என கன்னட மக்கள் சிலர் சொன்னதால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகப்பிரசன்னா அமர்வு, முதலாவதாக நடிகர் கமல்ஹாசனை கண்டித்ததோடு, கமல் மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி மன்னிப்பு கேட்டால் மட்டுமே மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இப்படி இருக்க, கமலஹாசன் மன்னிப்பு கேட்க முன்வராததால், இந்த பிரச்சனையில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளனர் கன்னடர்கள் சிலர். எப்படி என பார்த்தல், விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை தயாரிப்பது பெங்களூரை சேர்ந்த கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமாகும். ஆதலால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாமல் தடையானால், தமிழ் நாட்டில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிட நாங்கள் விட மாட்டோம் என கன்னட நெட்டிசன்கள் தற்பொழுது தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் இதே தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் நடிகர் யாஷின் பான் இந்தியா திரைப்படமான 'டாக்சிக்' திரைப்படத்தையும் தமிழ் நாட்டில் வெளியிட விடமாட்டோம் என் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல் முறையாக ரொமான்டிக் லுக்கில் தொகுப்பாளினி பிரியங்கா..! கணவருடன் செய்த சேட்டை காட்சி..!