நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இதையும் படிங்க: உச்சத்தில் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே தலையில் இறங்கிய இடி..!!
சமீபகாலமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.83 ஆயிரம் ரூபாயை கடந்து ரூ.84 ஆயிரத்தை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கம் விலை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (23/09/2025):
கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று இரண்டு முறை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.84,000க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.83 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை தற்போது ரூ.84 ஆயிரத்தை தொட்டிருப்பது இல்லதரிசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு வாரத்தில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்புள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.77 அதிகரித்து ஒரு கிராம் 11 ஆயிரத்து 455 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.616 அதிகரித்து ஒரு சவரன் 91 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.149க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் என்ன?
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.
இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
இதையும் படிங்க: உச்சத்தில் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக் மேல ஷாக்..!!