உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணியில் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்..!
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா விண்மீன் ஆலயத்தில் திருப்பலியுடன் தொடங்கியது . இதை தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெற உள்ள திருப்பலியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நிறைவேற்றப்பட்டது
அதைத்தொடர்ந்து பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர் திருப்பலிகளின் நிறைவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொருபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார் இதை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள பக்தர்கள் பங்கேற்றனர்
இதையும் படிங்க: மழை மரம் கிறிஸ்துமஸ் சின்னமாக மாறியது எப்படி..? வெள்ளி விழா கொண்டாடும் இளைஞர்கள்..!
இதையும் படிங்க: உலக ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் அஷ்டமி சப்பரவிழா..மதுரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!