கனடாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் இறந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா?... வேட்டியை மடித்துக் கட்டி களமிறங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்... பரபரப்பான கரூர்...!
பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபரின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் மேலும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு பாதிக்கப்பட்டவர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சுமார் 25 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்காக உள்ளூர் மருத்துவ மையத்தில் மதிப்பீடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். மீதமுள்ள அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பதற்றம்... அப்பல்லோ மருத்துவமனை விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்....!