கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் ஊர் ஊராக சென்று ஊசிமணி பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த கணவர் திடீரென இருதய நோயால் பாதிக்கப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை நலம் விசாரிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அவரின் சித்தப்பா மகன் வந்துள்ளார். அண்ணனிடம் ஓய்வெடுக்க அறிவுறுத்திய தம்பி அண்ணியையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் செல்வதாக கூறி திருவண்ணாமலைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில் தான் சென்ற 16 ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து கடலூரில் உள்ள அண்ணனின் உறவினர்களை தொடர்பு கொண்டு கடைசி குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மறுநாள் காலை கடலூரில் குழந்தையின் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுகளை செய்த உறவினர்கள் பஸ்ஸில் குழந்தையின் சடலத்துடன் வரும் தாய்க்காக காத்திருந்துள்ளனர். ஆனால் குழந்தையின் தாய் பேருந்து நிலையத்தில் இறங்காமல் உழவர் சந்தை அருகிலேயே இறங்கி உள்ளதாக தெரிகிறது.

இதை அடுத்து உயிரிழந்த குழந்தையை தோலில் போட்டுக்கொண்டு அந்த தாய் சாலையில் அழுதபடி சுற்றி திரிந்துள்ளார். இதனை கவனித்த உறவினர்கள் சந்தேகத்துடன் குழந்தையின் உடலை பரிசோதித்த போது அதன் பிறப்புறுப்பு உட்பட பல இடங்களில் காயம் இருந்துள்ளது. அதன் காரணமாக குழந்தையின் உடலை மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

போலீசாரிடம் குழந்தையின் தாய் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். அதோடு குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது. இதை தொடர்ந்து தாயிடம் மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் மொத்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அண்ணன் மனைவியை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றவர் அண்ணியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். மேலும் அவரின் மூன்று வயது மகளையும் அவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தினமும்
அந்த பிஞ்சு குழந்தையை அடித்தும் பற்களால் கடித்தும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!
ஒரு கட்டத்தில் அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் இறந்து போயிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை எடுத்து திருவண்ணாமலை சென்று குற்றவாளியை காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது போலீசாரிடமிருந்து அவர் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. நடந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயையும் அவரின் கள்ள காதலனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த நாள் - ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு...!