சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா களமிறங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, கட்சித் தலைவர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
அவரது வேட்பாளர் நியமனம் மற்றும் பிரசார நடவடிக்கைகள், வில்லிவாக்கம் தொகுதியை 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் முக்கிய போட்டி மையங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். தவெகவில் இணைந்த பிறகு, கட்சியின் தேர்தல் பிரசாரத்தை திறம்பட மேலாண்மை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், வில்லிவாக்கம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கட்சியின் முழு வேட்பாளர் பட்டியலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பெயர் வில்லிவாக்கத்துக்கு உறுதி செய்யப்பட்டது. மார்ச் இறுதியில் தவெக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்திற்கு சமூக வரவேற்பு இருப்பதாக கூறி வருகிறார் ஆதவ் அர்ஜுனா.
இதையும் படிங்க: கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள்... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வாகை சூடும் என்ற தெரிவித்துள்ளார். வெற்றித் தலைவர் விஜயின் பிரதிநிதியாக, வில்லிவாக்கம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று களத்தில் நிற்கிறோம் என்று கூறியுள்ள ஆதவ் அர்ஜுனா, விரைவில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக வாகை சூடுவது உறுதி என்று தெரிவித்தார். நம்மால் முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே தடாலடி மாற்றம்... விஜய்க்கு கிடைத்தது அனுமதி... தவெக தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!