விசிக குறித்து பேசிய ஆ. ராசா விமர்சனத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம் தெரிவித்தார். ஆ ராசாவின் நோக்கமே கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். மத அரசியலை தங்கள் தலைவர் விஜய் தூக்கி எறிந்திருப்பதாக தெரிவித்துள்ளார். எல்லோருக்குமான முதல்வராக இருக்கிறார் என்றும் நடந்து முடிந்த தேர்தலில் பணபலம் தூக்கி எறியப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக நீதி மற்றும் மதசார்பற்ற அமைச்சரவையை முதல்வர் விஜய் உருவாக்கி இருக்கிறார் என்று தெரிவித்தார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றும் சாதி பின்புறத்தை பார்க்காமல் இளைஞர்களுக்கு பதவி அளிக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். கட்சிக்காக உறுதியாக உழைத்தவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் உறவை வைத்து பேசும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி ஒரு கட்சியின் தலைவரை விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை விமர்சித்து திமுக எம்பி ஆ ராசா வெளியிட்ட பதிவினை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் ஒரு கட்சியின் தலைவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: #BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்..! கிரீன் சிக்னல் காட்டிய திருமா..! விசிக ஆதரவு கடிதத்தை பெற்ற ஆதவ்..!
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் ஏதோ ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வார்த்தைகளை திமுகவினர் பயன்படுத்துவார்கள் என்றும் தோற்றதற்கான காரணத்தை தேடுகிறது திமுக என்றும் இதுவரை அவர்களுக்கு காரணமே தெரியவில்லை என்று கூறுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி ஆ.ராசா திருமாவளவனிடம்உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: LIMITS என்னனு தெரிஞ்சி நடந்துக்கோங்க.. எப்பவும் மீறக்கூடாது..!! தவெகவினருக்கு என்.ஆனந்த் வார்னிங்..!!