நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர்புடைய குளறுபடிகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது மற்றும் போலீஸ் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட உதவி வழங்கும் நோக்கில், மூத்த வழக்கறிஞர் மற்றும் ராஜ்ய சபா எம்.பி. கபில் சிபல் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் உடன் இணைந்து பேசிய கபில் சிபல், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தினார். பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அரசு அளித்த உத்தரவாதங்களை மீறி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக CJP குற்றம் சாட்டிய நிலையில், இந்த சட்ட உதவி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவியின் மூலம், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்காணிக்கும் பொறிமுறை உருவாக்கப்படும். CJP ஒரு வெப்சைட் தொடங்க உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகியவை இடம்பெறும். மேலும், நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் தங்களை பதிவு செய்து, ப்ரோ போனோ அல்லது பிற வகையில் சட்ட உதவி வழங்க முடியும். இந்த தளம் மூலம் போராட்டக்காரர்களை வழக்கறிஞர்களுடன் இணைக்கும் வசதி உருவாக்கப்படும்.
இதையும் படிங்க: "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!
கபில் சிபல் தனது அறிவிப்பில், “இந்தியா முழுவதும் அமைதியான போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் மாணவர்கள் அல்லது போராட்டக்காரர்கள் குறிவைக்கப்பட்டால், அவர்களுக்கு சட்ட உதவி வழங்க ஒரு பொறிமுறையை உருவாக்க முடிவு செய்துள்ளோம். என் பங்கில் ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன். இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். சட்டத்தின் தவறான பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் வழக்கறிஞர்கள் ஆதரவாக நிற்பார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் திடீர் அதிர்ச்சி... சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்!