தந்தை - மகன் கமிஷன் கூட்டணி சம்பளம் ஆகி இருப்பதாக அதிமுக விமர்சித்துள்ளது. அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி தமிழக "பொறுப்பு" டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் பக்கம் 51-ல், "டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.

"தியாகி" பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே என்று நக்கல் அடித்துள்ளது.
இதையும் படிங்க: திமுக ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து..! பொன்னாடை போர்த்தியபோது கழுத்தில் குத்திய அதிர்ச்சி சம்பவம்...!!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம் என்றும் இன்னும் இரண்டே மாதங்கள் தான்., அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்., முகத்திரைகள் நீக்கப்படுவது உறுதி என்று அதிமுக திட்டமிட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆயிரம் விளக்கில் களம் இறங்கும் மு.க.ஸ்டாலின்?! கொளத்தூர் இல்லையா? உதயநிதி, கனிமொழி களம் காண்பது எங்கே?