நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வ . உ . சிதம்பரனாரின் குருபூஜை முன்னிட்டு திண்டுக்கல் - திருச்சி சாலையில் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகார் தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு, பீகார் இடைத்தேர்தல் போல தமிழகத்தில் நூற்றுக்கு நூறு வெற்றியாக வரும். 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி 2026ல், பீகார் நிதீஷ் குமார் போன்று முதலமைச்சராக வருவார்.
எஸ் ஐ ஆர்யை எதிர்க்கட்சிகள் அனைவரும் எதிர்கின்றனர். தமிழர்களின் வாக்குகள் பறிக்கப்படும் எனக் கூறுகின்றனர் இதுகுறித்து உங்களது கருத்து என்ற கேள்விக்கு, SIR எதிர்க்க ஒன்றுமில்லை 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. எதற்காக ராகுல் அவர்கள் SIR எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. ஸ்டாலினும் இதை இழுத்து வருகிறார். வாக்காளர் சேர்க்கும் இடத்தில் திமுக கொடி தான் பறக்கிறது அவர்கள்தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள். SIR -யை வீடு வீடாக சேர்க்க வேண்டும். நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஏன் திமுக மற்றும் ஸ்டாலின் இதை தடுக்கிறார்கள் தெரியவில்லை. ஏன் நடுங்குகிறார்கள் என தெரியவில்லை புலி வால் பிடித்து விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என்றார்.
இதையும் படிங்க: அவசர அவசரமாக SIR... 6 கோடி பேருக்கு வாக்குரிமை பறிபோகும்... சீமான் எச்சரிக்கை...!
எஸ்ஐஆர் பணிகளை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் புறக்கணிப்பு செய்வது குறித்த கேள்விக்கு, 234 தொகுதிக்கும் என ஆயிரக்கணக்கான வாக்கு சாவடிகள் உள்ளது. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள். அரசு ஊழியர்கள் செய்வது சரி, நூற்றுக்கு நூறு சரி என்றார்.
SIR - யால் ஒரு கோடி வாக்குகள் குறையும் என்ன சீமான் கூறுவது குறித்த கேள்விக்கு, சீமான் சொல்வது குறைவான வாக்குகள் அதிகமான வாக்குகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் பாதிக்கும் என்றார். SIR எதிர்ப்பு போராட்டம் குறித்து விஜய் இடம் தான் கேட்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பீகார் தேர்தல் வெற்றிக்கு SIR தான் காரணம் எனக் கூறினார்.
திமுகவை வசை பாடுவதற்காகவே SIR எதிர்ப்பு போராட்டத்தை விஜய் நடத்தியுள்ளார் என திருமாவளவன் கருத்து தெரிவித்தது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: வலுக்கும் எதிர்ப்பு... கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம்... SIR - க்கு எதிராக கண்டன முழக்கம்...!