அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கடுமையாக கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழக பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் எடப்பாடியாரை வணங்கி இருபெரும் தெய்வங்களின் ஆசியோடு தமிழ்நாடு மக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
அடையாளம் கொடுத்து ,அதிகாரம் கொடுத்து, முகவரி கொடுத்து, வாழ்வு கொடுத்து, தங்களை ஆளாக்கிய கட்சியை காப்பாற்ற வேண்டிய இந்த சோதனையான நேரத்திலே கட்சி சரியில்லை, தொண்டர்கள் சரியில்லை தலைமை சரியில்லைன்னு அவதூறுகளை அள்ளித் தெளித்துக் கொண்டே இருந்தால் தொண்டர்கள் இனியும் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் .விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து தன்னுடைய நாடகத்திற்கான விடை கொடுத்து இருக்கிறார். இது வளர்த்த கடா மார்பில் பாய்வது போல ஒரு வேதனையை தான் தலைமைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த கட்சிக்கு விஜயபாஸ்கர் வருவதற்கு முன்பாக தனக்கும்
,தன் குடும்பத்திற்கும் இருந்த சொத்துபத்துகளையும் இப்போது விஜயபாஸ்கர் வைத்திருக்கிற சொத்து பத்துக்கள் முதலீடுகளை எல்லாம் அவர் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு வேறு கட்சிக்கு போவாரா ? இது தொண்டர்களுடைய எதிர்பார்ப்பு .
இதையும் படிங்க: ஆஹா ஓஹோ...!! பேஷ் பேஷ்...!! விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் சொன்ன சனிக்கிழமை ஸ்டோரி...!
கட்சியில வாங்கின பதவி வேணடாம், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வேண்டாம் என ராஜினாமா செய்து விட்டு என்று போய்விட்டீர்கள் அதனால் நியாயப்படி நீங்கள் கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்த நிலையில் தானே வேற கட்சிக்கு போக வேண்டும்.
இந்த கட்சியில் எல்லாம் ஆண்டு அனுபவிப்பீங்க சொத்து பத்துகளை சேர்த்து முதலீடு செய்தீர்கள், செல்வாக்கை சேர்ப்பீர்கள் ,எல்லாம் சேர்த்த பிறகு தலைமையும் விமர்சிப்பீர்கள். தொண்டர்களை கைவிட்டு ,மக்களை கைவிட்டு, உங்கள் சுயநலத்திற்காக உங்கள் முதலீடைக் காப்பாற்ற, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீங்கள் கட்சியை காட்டிக் கொடுத்தால் தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் வயிறு எரிகிறது. எம்ஜிஆர் வளர்த்த கட்சி, அம்மா வளர்த்த கட்சி, இன்றைக்கு சாமானியர் எடப்பாடியார் கட்சியை நடத்தி வருகிறார் தலைமை சரி இல்லை என்று பதிவு போடுகிறீர்கள் எப்போ போடுவது?

10 வருஷமா நீங்க அவர் காதை கடிச்சு, காலை பிடித்து எத்தனை எத்தனை விஷயங்களை நீங்க செய்தீர்கள், இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா இப்படி நீங்க போயிட்டு இருக்கீங்க நாங்க வாய் மூடிட்டு மௌனமா வேலைக்கு பாத்துட்டு இருக்கணுமா? உண்மை தொண்டர்கள் எல்லாம் ஏமாளிகளா விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது ?
அதிமுக சேரும் முன்பு உங்கள் குடும்பத்தை பற்றி இந்த நாட்டுக்கு யாருக்காவது தெரியுமா? எந்த எதிர்பார்ப்பு இன்றி அதிகாரத்தை பார்க்காமல், பதவி சுகத்தை பார்க்காமல் ,கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் எதிர்காலத்தை நீங்கள் கேள்விக்குறியாக்கிவிட்டு நீங்கள் சென்று உள்ளீர்கள்? நீங்கள் தான்தோன்றித்தனமாக செய்யலாமா? உங்களுக்கு மனசாட்சி இல்லையா? அம்மா ஆன்மா, எம்ஜிஆர் ஆன்மா உங்களை சும்மா விடுமா?
இப்போது உங்களுக்கு என்ன தைரியம் வந்துவிட்டது என்பது தெரியுமா? முன்பெல்லாம் கட்சியில் அதிகாரத்தை அணிவித்து விட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினால் தொண்டர்கள் கொதித்து விளக்குமாறு ,செருப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குள்ளே நுழைவு விடாமல் செருப்படி கொடுப்பார்கள், அதையெல்லாம் தற்போது நடக்கவில்லை தொண்டர்கள் செய்யவில்லை என்ற தைரியத்தில் நான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள்.
தலைமையை புகழ்ந்து பேசிவிட்டு தொண்டர்களை ஏமாற்றிவிட்டு எல்லா சுகத்தையும் அனுபவித்து விட்டு காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு கல்குவாரி எடுத்துவிட்டு எத்தனை கல்லூரி உங்களிடம் உள்ளது இது எல்லாம் உங்கள் தாத்தா போட்ட பிச்சையா?
நீங்கள் நன்றி சொல்ல வருகிறீர்கள் ராஜினாமா செய்கிறேன் என்று கூறினீர்கள் நாங்கள் இத்தனை நாள் வாயை மூடி இருக்கிறோம் என்று சொன்னால் எங்களுக்கு என்ன தெரியாது என்று நினைக்கிறீர்களா?
அம்மாவை ஏமாற்றி பதவி வாங்குவீர்கள் சொத்து சுகத்தை சேர்ப்பீர்கள், எடப்பாடியாரை ஏமாற்றுவீர்கள் சொத்து சுகத்தை சேர்ப்பீர்கள் .கட்சிக்கு ஒரு தோல்வின்னு வந்துட்டா காப்பாற்ற வேண்டிய நேரத்துல கட்சியை காட்டி கொடுத்துட்டு ஓடுவீங்க தொண்டர்கள் எல்லாம் இதை எல்லாம் கைகட்டி வாய் பொத்தி மௌனமா வேடிக்கை பார்க்கணுமா?
தொண்டர்கள் கொதித்து எழுந்தால் நீங்கள் நாசமாகப் போய் விடுவர்கள்
அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்கள்? நாய் மாதிரி கேட்டில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு எல்லாம் சூடு சொரணை இல்லையா? சோற்று உப்பு போட்டு தானே சாப்பிடுகிறீர்கள் பதவி இல்லன்னா என்ன? பத்து வருஷம் அமைச்சரா இல்லையா ?
ராணுவ வீரர்கள் எதிரியிடமிருந்து நாட்டை தங்களை காப்பாற்ற வெற்றி பெறுவார்கள் இல்லையென்றால் மரணம் அடைவார்கள் எதிரியிடம் சரணாகதி அடைய மாட்டார்கள்
எதிரியிடம் சரணாகதி பெற்று உயிர் பிச்சை கேட்டு வாழ்கிற வாழ்வதைவிட செத்து போறது மேல்
54 வருடம் இந்த இயக்கத்தில் எந்த பதவியும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறானே தொண்டன் அவர்களை நம்பி தான் கட்சி இருக்கிறது தவிர உங்களைப் போல ஓடுகாலிகளை நம்பி இந்த கட்சி இல்லை . இந்த இயக்கத்தை வழி நடத்துவதற்காக எடப்பாடியார் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கிறார் அதையெல்லாம் கேள்விக்குறியாக்கும் வகையில் உங்கள் நடவடிக்கை உள்ளது
சொந்த கட்சியில் ஜெயித்தால்தான் அமைச்சராக முடியும் வேறு கட்சியில் அமைச்சரானால் மதிக்க மாட்டார்கள் த.வெ.க நல்ல கட்சி என்றால் தேர்தலுக்கு முன்பாக சேர்ந்து இருக்க வேண்டாமா? ஏன் தேர்தல் பின்பு த.வெ.கவில் சேருகிறீர்கள் விஜயை வாழ வைக்கப் போகிறீர்களா? எத்தனை பதவி சுகம் கொடுத்த கட்சியை தோற்றவுடன் காட்டிவிட்டு செல்கிறீர்கள் அதிமுகவிற்கு இந்த கதி தான் விஜய்க்கு என்ன கதி?
தலைமை சரியில்ல என கருத்து சொல்லி நாடகமாடி கட்சி தொண்டர்களுடைய நலனையும், கட்சியின் எதிர்காலத்தையும் காவு கொடுத்து விட்டு தங்களுடைய வாழ்வாதாரம் மட்டுமே முக்கியம் என்று கட்சி தாவுகிற நடவடிக்கை இனிமேல் தொடர்ந்தால் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எச்சரிக்கைக்காக இதை சொல்லுகிறேன்
இதையும் படிங்க: தலைமைச்செயலகம் டு தனி விமானம் வரை... விஜயை ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த அந்த 4 பேர் யார்?... ட்விஸ்ட்டை உடைத்த ஆர்.பி.உதயகுமார்...!