சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்தவர் பிரசாத். இவர் அதிமுக ஐடி விங் தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 22 ஆம் தேதி தனது நண்பர்கள் சிலருடன் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் பார் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து பார் மேலாளர் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

அதன்படி, அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார், அவரது நண்பரான முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த ரவுடி சுனாமி சேதுபதி, கணேஷ்குமார், தனசேகரன் மற்றும் தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் மீது அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன.
இதையும் படிங்க: #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

இதுக்குறித்து பிரசாத்திடம் நடத்திய விசாரணையில், அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, தூண்டில் உணவக உரிமையாளர் ராஜா ஆகியோர் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது. மேலும், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையும் பிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் செய்து வந்துள்ளது. இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் சிலரும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட துணை செயலாளரான பிரசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜூன் 19ல் ராஜ்ய சபா தேர்தல்.. இபிஎஸ் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்!