கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வசித்தார். அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்ட மேடை, காமெடி ஷோ மேடையாக மாறியது. மேடையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசும் போது சக தலைவர்கள் கவனிக்காமல் கூட்டதிற்கு செய்கை காட்டுவது, அவர்களுக்குள் பேசுவது, பேசிக்கொண்டிருக்கும் போதே முடித்து கொள்ள வலியுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே அம்மன் அர்ஜூணன் பேசும் போது பெண்கள் குறித்து அவதூறான கருத்துகள், பொள்ளாச்சி ஜெயராமன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பெண்களை கண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், எடப்பாடியார் 4 ஆண்டுகள் 2 மாதங்கள் ஆட்சி செய்த போது இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெயர் வாங்கியது. அவரது ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!
விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு செல்கிறது.எடப்பாடியார் 5 திட்டங்களை தான் அறிவித்தார். முதல்வர் மூன்று நாட்களாக ஜுரம் வந்து படுத்துவிட்டார். அதன் பின் விடியகாலை 5 மணிக்கு ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் போட்டார், யாரும் அவரது கையை பிடிக்கவில்லை. 5 மணிக்கு ஏன் 5 ஆயிரம் போட்டீர்கள் பயம்.
உங்களை போல மூக்குத்தி இருக்கா? கம்மல் இருக்கா? விட்டா புருசன் இருக்கா? என கேட்டிருப்பாய். நாங்கள் அப்படி இல்லை குடும்ப தலைவிக்கு 2 ஆயிரம் அறிவித்தவுடன், ஸ்டாலினுக்கு சுரம் வந்து விட்டு.
இந்த 5 ஆயிரம் மாதம் மாதம் வரும் என நினைக்காதீர்கள். 3 மாத பணம், வெயில் என போட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் மேகமே நிழலை கொடுத்துவிட்டது என்றார்.
தேஜகூட்டணி சார்பில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேச துவங்கிய போது யாரும் கண்டுகொள்ளாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் திடீரென கடுப்பான பொள்ளாச்சி ஜெயராமன் பெண்களை நோக்கி “ஏ.. மா நாலு பேரு பேசிட்டே இருக்கீங்க, நீங்க பேசரமாதிரி இருந்தா நான் மைக் தருகிறேன்” என கடிந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இரண்டு அமாவாசை தாண்டுவதற்கு இங்கிருந்து எடப்பாடி எக்ஸ்பிரஸ் சென்னை ஜெயின்ஜார்ஜ் கோட்டையில் முதல்வராவார். முதல்வர் வாழ்க்கை வரலாறு படம் எடுக்க போகிறார்களாம். அதில் சமுத்திரகனி நடிக்கிறாராம். இரண்டு மாதங்களில் ஸ்டாலின் கோபாலபுரம் வருவார் அந்த படத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!