மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் அமித்ஷா உரையாற்றிய போது திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது; ஆயிரம் ஆண்டு காலப் பழமை உள்ள முருகனின் அறுபடை வீடான நமது திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லக்கூடிய துணிச்சல் இந்த திமுக அரசுக்கு வந்திருக்கிறது., பல ஆயிரம் ஆண்டுகளாக முருகன் பக்தர்கள் வழிபட்டு வந்த அந்த தலத்தில் அரசியல் பிரிவினைவாதம் கருதி இந்த அரசு செயல்படுத்தி வருகிறது., அது சிக்கந்தர் மலையா., இதை சொல்லும் துணிச்சல் எப்படி வந்தது. ஜூன் 22 ஆம் தேதி முருகன் மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டுங்கள் என கூறினார்.
இதையும் படிங்க: வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அமித்ஷா ஓபன் சேலஞ்ச்...

தொடர்ந்து பேசிய அவர், பகல் காமில் சுற்றுலாப் பயணிகளை கொன்ற தீவிரவாதிகளை பாகிஸ்தானிற்குள் நுழைந்து அழித்தது முப்படைகளின் தீரம். 100 கிலோ மீட்டர் அவர்களின் எல்லைகளுக்குள் பறந்து சென்ற தீவிரவாதிகளை துல்லியமாக தாக்கி அவர்களை மண்ணோடு மண்ணாக்கினோம். மோடி ஆட்சியில் அனைத்திலும் வளர்ச்சி கண்டு உள்ளோம். பிரதமர் மோடியின் ஆட்சியில் முப்படைகளிலும் தன்னிறைவான நிலை ஏற்பட்டுள்ளது.

மோடி சொல்கிறார்... ஆப்ரேஷன் சிந்துர் இன்னும் முடியவில்லை., தீவிரவாதிகள் வாலாட்டினால் அவர்களிடத்திற்குள் புகுந்து ஆகியவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன். பாகிஸ்தான் ஏவுகணை ட்ரோன்களை எல்லைப் பகுதியில் வீசியபோது இந்தியாவின் வான்வழி வல்லமையை உலகம் உணர்ந்தது என ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. மதுரை மண்ணில் அமித்ஷா சூளுரை!!