திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' எனப்படும் உயரமான கோபுரத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்றுவது கோயில் நிர்வாகத்தின் நீண்டகால பாரம்பரியமாக உள்ளது. இது 1996, 2014, 2017 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றங்களால் அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்த தீபத்தூண் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகில் அமைந்துள்ளதால், சில இஸ்லாமிய அமைப்புகள் இது தங்கள் மத இடத்தை அவமதிப்பதாக எதிர்த்து வந்தன.
மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீப ஏற்றம் போன்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகளுக்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றம் தொடர்பான ஒரு சிறிய சர்ச்சை, மாநில அரசு, நீதிமன்றம், மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான மோதலாக மாறியது. நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியா கூட்டணி எம்பிகள் இடம் கையெழுத்து பெறப்பட்டு திமுக எம்பிக்கள் சபாநாயகரிடம் தீர்மான நோட்டீசை வழங்கினர்.

தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தும் அதனை தமிழக அரசு நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக எம் பி அனுராக் தாகூர் பேச்சால் சர்ச்சை எழுந்தது. தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஊழலும், மோசடியும் இல்லாத துறையே இல்ல... திமுக அரசை பந்தாடிய அண்ணாமலை...!
அப்போது, அமைதி பூங்காவன தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என திமுக எம்பி ராணி ஸ்ரீகுமார் குற்றம் சாட்டினார். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜய் தான் முதல்வர் வேட்பாளர்... கூட்டணிக்கு வாங்க... செங்கோட்டையன் அழைப்பு...!