• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 30 Jul 2026 19:29:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Don't assent to Vande Mataram Bill": VCK chief Thol Thirumavalavan urges President of India

    அரசு மற்றும் கல்வி நிறுவன விழாக்களில் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் எக்காரணம் கொண்டும் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

    மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வந்தே மாதரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா குறித்துத் தொல். திருமாவளவன் எம்பி இன்று வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், வந்தே மாதரம் பாடலை அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் விழாக்களில் கட்டாயமாகப் பாட வேண்டும், இல்லாவிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என அறிவித்து மத்திய பாஜக அரசு சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. 

    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அந்தப் பிரிவினைவாத, மதசார்புள்ள கருத்துகளைக் கொண்ட பாடலுக்கான சட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

    மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை தடுப்புச் சட்டம் (திருத்தம்) மசோதா, 2026 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் எதிரான ஆபத்தான நடவடிக்கையாகும். அரசியல் நிர்ணய சபை 1950-இல் திட்டமிட்டே எடுக்க மறுத்த முடிவை, 76 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு சட்டத்தின் மூலம் திணிக்க முயல்கிறது.

    குடியரசுத் தலைவர்

    1937-ஆம் ஆண்டிலேயே மகாத்மா காந்தி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள், வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பொதுநிகழ்வுகளுக்கு ஏற்றவை என்றும், பிற சரணங்களில் இடம்பெறும் தெய்வ வழிபாட்டுக் கூறுகளை அனைவர்மீதும் திணிப்பது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு உகந்ததல்ல என்றும் தெளிவாக முடிவு செய்திருந்தனர். அதையே அரசியல் நிர்ணய சபையும் ஏற்றுக்கொண்டதால் தான் தாகூரின் 'ஜன கண மன' பாடல் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது என வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்த வரலாற்றைப் புறக்கணித்து, வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களுக்கும் குற்றவியல் சட்டப் பாதுகாப்பை வழங்குவது நாட்டை ஒருங்கிணைக்கும் செயல் அல்ல; மாறாக, மத அடிப்படையிலான பிளவுகளை ஆழப்படுத்தும் முயற்சியாகும். ஏற்கனவே பிஜு இமானுவேல் வழக்கில் அளித்தத் தீர்ப்பில், தேசிய கீதத்தைப் பாட மறுத்தாலும் மரியாதையுடன் எழுந்து நிற்பது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடும் கேரளமும் வரலாற்று ரீதியாக வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாகப் பாடச் செய்வதை எதிர்த்து வந்துள்ளன. 

    மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசில் மரியாதை என்பது சட்டத்தின் மூலம் திணிக்கப்பட முடியாது; அது மக்களின் மனங்களில் உருவாக வேண்டும். எனவே, அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நாட்டை மதரீதியில் பிளவுபடுத்தும் இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது எனத் தனது அறிக்கையில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: "நதி இருந்த இடத்தில் குப்பைகள்... சனத்குமார் நதியை ஆய்வு செய்த தருமபுரி எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி!

    மேலும் படிங்க
    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    தமிழ்நாடு
    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    ஹப்பாடா... கோழி இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு வாபஸ்..! சிக்கன் பிரியர்கள் நிம்மதி..!!

    ஹப்பாடா... கோழி இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு வாபஸ்..! சிக்கன் பிரியர்கள் நிம்மதி..!!

    தமிழ்நாடு
    காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    தமிழ்நாடு
    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    தமிழ்நாடு
    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    ஹப்பாடா... கோழி இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு வாபஸ்..! சிக்கன் பிரியர்கள் நிம்மதி..!!

    ஹப்பாடா... கோழி இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு வாபஸ்..! சிக்கன் பிரியர்கள் நிம்மதி..!!

    தமிழ்நாடு
    காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    தமிழ்நாடு
    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share