தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ராஜ், மருத்துவராகப் பணியாற்றிய பின்னர், 2009ஆம் ஆண்டு இந்திய வருவாய்ப் பணியில் இணைந்து, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையில் இணை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2016ஆம் ஆண்டு, சேகர் ரெட்டியின் கூட்டாளியிடம் நடத்திய சோதனையில் 70 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றியதற்காக பாராட்டுகளைப் பெற்றவர் அருண் ராஜ். இவர் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். தமிழக வெற்றி கழகத்தின் ஆரம்ப அமைப்பு பணிகளில் முக்கிய ஆலோசகராக செயல்பட்டதாக கூறப்படும் அருண்ராஜ் தற்போது, தமிழக வெற்றி கழகத்தின் இணைந்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக அருண் ராஜை நியமித்து கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் தற்போது உள்ள கட்சிகளில் கொள்கை பிடிப்பு உள்ள கட்சி தமிழக வெற்றி கழகம் தான் என பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெகவில் ஐக்கியமான VIP-க்கள்..! அரசியலில் ஜெட் வேகத்தில் பறக்கும் விஜய்..!

தமிழகத்திற்கு தேவையான அரசியலை விஜய் முன்னெடுப்பதாகவும் தன்னை தமிழக வெற்றிக்கழகத்தில் விஜய் இணைத்து கொண்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுவா அதுவா என்ற சாய்ஸ் கிடையாது என்று தெரிவித்த அருண்ராஜ், மக்கள் அதிகாரம் இருந்தால் தான் எதையும் செய்ய முடியும் என்றும் மக்களுக்கு சேவை செய்யவே தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: #2026ELECTION: மக்களை சந்திக்கும் விஜய்.. அனல் பறக்கும் தேர்தல் களம்..!