தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன. இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டதாக சக்கரபாணி தெரிவித்தார். ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது என்றும் சக்கரபாணி தெரிவித்தார். திமுகவினர் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்ததாக கூறியதற்கு அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் கொடுத்தார். திமுக ஆட்சியில் விவசாயிகளிடமே லஞ்சம் பெற்றார்கள் என்ற குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம்...! முதல்வர் விஜய் தீர்மானத்தை ஆதரித்த திமுக..!
ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரி செய்ய தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். திமுக ஆட்சியில் ரேஷன் இல் தரப்பட்ட அரிசியை பயன்படுத்தும் முடியவில்லை என்று மக்களே கூறினார்கள் என்றும் திமுக ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது அமைச்சர் தவறான தகவல்களை அளித்ததாக திமுக உறுப்பினர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "எங்கும் தமிழ்"..! தமிழுக்கு தனி மரியாதை..! சட்டப்பேரவையில் CM விஜய் கொண்டு வந்த முக்கிய தீர்மானம்..!!