பீகாரின் அரசியல் வரலாற்றில் 2025 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியத்துவமான திருப்புமுனையாக அமைந்தது. நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டன. 7.45 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்தல், 1951 முதல் பீகாரின் அதிக வாக்காளர் பங்கேட்பை (67.13%) பதிவு செய்தது.
ஆனால், இந்த உற்சாகமான பங்கேட்புக்கு மாறாக, காங்கிரஸ் கட்சி தனது எதிர்பார்ப்புகளைத் தாண்டி பெரும் பின்னடைவை சந்தித்தது. 2020 தேர்தலில் 19 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், இம்முறை வெறும் 2 முதல் 7 இடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது, இது கட்சியின் அரசியல் செல்வாக்கின் சரிவை வெளிப்படுத்துகிறது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் போட்டியில் இருந்தார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி இருந்தார்.
இதையும் படிங்க: மீண்டும் நிதீஷ் ஆட்சி..! 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்பு...!
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் NDA கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. இருப்பினு ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், பீகார் சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகோபூரைச் சேர்ந்த ஆர்ஜேடி எம்எல்ஏ தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பீகாரில் NDA வெற்றிக்கு இது தான் காரணம்... ஜன் சுராஜ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு..!