சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. அப்போது சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் வழக்குகளை தள்ளுபடி செய்தது. மேலும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்புமீறி செயல்படுகிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மீது விசாரிக்கலாம், ஒட்டுமொத்த நிறுவனத்தையும் நீங்கள் எப்படி விசாரிக்கலாம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: புருஷனை கொல்லுறப்போ கைகட்டியா நிப்பீங்க! பெண்களுக்கு வீரமே இல்லை! பாஜ எம்.பி சர்ச்சை பேச்சு..!
டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடைபெற்றுள்ளது என அமலாக்கத்துறை கூற முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்களை குளோன் செய்துள்ளது அமலாக்கத்துறை என நீதிபதிகள் தெரிவித்தனர்.டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனமாகும்.

தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் விசாரிப்பதா? என தெரிவித்து டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை திமுக நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமர்சனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதித்துள்ளது. அதை நினைத்துக் கொண்டு உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது கொஞ்சம் அடக்கி பேச வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை அடுத்து மூவர்ண தேசிய கொடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், தமிழக முதல்வருக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 3 ஆண்டுகளாக புத்தியில் படவில்லை, ஆகாஷ், ப்ரமோஸ் ஏவுகனை பாகிஸ்தானை அதகளப்படுத்தியது, தற்போது ஒரு ஆகாஷ் வந்துள்ளார் அறிவாலயத்தை அதகளப்படுத்த என்றார்.

உச்சநீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதித்துள்ளது. அதை நினைத்துக் கொண்டு உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது கொஞ்சம் அடக்கி பேச வேண்டும் மத்திய அரசு கல்வி நிதியை வழங்கி வருகிறது என்றும் கூறினார், இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அத்துமீறும் போலீசார்! சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு! முதல்வரை வெளுத்து வாங்கும் நயினார் நாகேந்திரன்..!