சென்னை மற்றும் மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆறு இடங்களிலும், மதுரையில் ஒரு இடத்திலும் என மொத்தம் ஏழு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதலே திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் ஆறு இடங்களிலும், அதேபோன்று மதுரையில் ஒரு இடத்திலும் என மொத்தம் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டு அந்தமானில் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வழக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு நபர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார் என்பதைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்!! ஹபீஸ் சையத்திற்கு என்ஐஏ அதிரடி... பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
அதன் அடிப்படையில், அவர்களுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போதைப்பொருள் விவகாரத்தில் பர்மாவில் இருந்து செயல்படக்கூடிய ஒரு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர்கள் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்துத்தான் இந்தச் சோதனையானது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் போதைப்பொருள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்குப் பின்புலமாக யார் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள், இதில் ஏதேனும் வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் இறங்கியுள்ளனர்.
இந்தச் சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்படும் ஆவணங்கள் என்ன, மேலும் இந்தச் சோதனையின் மூலம் வேறு ஏதேனும் தகவல்கள் விசாரணையில் தெரியவருகிறதா என்பது குறித்து தெரியவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?