சென்னை திருவொற்றியூரில் இருக்கக்கூடிய அரசு பள்ளி அருகே 12-ஆம் வகுப்பு மாணவரான தனுஷ் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 10 பேர் சேர்ந்துதான் இந்த 12-ஆம் வகுப்பு மாணவனை அடித்துக் கொலை செய்ததாக அதிர்ச்சித் தகவலும் வெளியானது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது திருவொற்றியூர் போலீசாரின் விசாரணையில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எட்டு நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக பல்வேறு தகவல்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக, கஞ்சாவுக்காகவும், அதேபோன்று பல்வேறு தரப்பில் ஏற்பட்ட மோதல் காரணமாகவும் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கோவையை தொடர்ந்து சென்னையிலும் மாணவருக்கு நடந்த கொடூரம்... 30+ மாணவர்கள் சேர்ந்து செய்த பயங்கரம்...!
இந்நிலையில், தற்போது போலீசாரின் விசாரணையில், என்ன காரணத்திற்காக இந்தக் கொலை நடந்திருக்கிறது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.
ஏற்கனவே 11-ஆம் வகுப்பு படித்துவிட்டு, மீண்டும் அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனை கேலி, கிண்டல் செய்ததால் எழுந்த பிரச்சினையும், அதேபோன்று பெண் மாணவிகளிடம் கேலி, கிண்டல் செய்ததால் எழுந்த பிரச்சினையும் என, இந்த விவகாரத்தில் மாணவர்களுக்குள் பெரும் பிரச்சினை உருவாகியிருக்கிறது.
அதன் காரணமாகத்தான் நேற்று தனுஷ் மீது மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில்தான் தனுஷ் உயிரிழந்திருப்பதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடுத்து, இந்த வழக்கில் தற்போதுவரை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் எட்டு நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வேறு எந்தெந்த மாணவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்ற கோணத்திலும் தற்போது திருவொற்றியூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!