ஒரு குழந்தையை அதன் உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தி வளர்க்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு தம்பதியர் பிரிந்து வாழும் நிலையில், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் – ஒரு ஆண் மற்றும் ஒரு பெண். குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாய் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பெண் குழந்தையை தாயின் பராமரிப்பிலும், ஆண் குழந்தையை தந்தையின் பராமரிப்பிலும் ஒப்படைக்குமாறு கீழமை நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, ஆண் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், “ஒரு குழந்தை தனது உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வளர்க்கப்படக் கூடாது. குழந்தைகள் தனித்தனி அறைகளில் பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகள் அல்ல” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு விரித்த வலை! திமுகவுக்கு விழுந்த குட்டு!! அமலாக்கத்துறை எதுக்கு வரணும்? ஐகோர்ட் அதிரடி!

நீதிபதி மேலும் கூறுகையில், “ஆண் குழந்தை தந்தையுடன் இனிமையாக நேரத்தை செலவிட்டதாகவும், தற்போது பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தந்தை தற்போது வெளியூரில் பணியில் இருப்பதால், இடைக்கால ஏற்பாடாக சிறுவன் தாயின் பராமரிப்பில் இருப்பார். இக்காலகட்டத்தில் தந்தை தாயின் வீட்டுக்கு சென்று இரு குழந்தைகளையும் சந்திக்கும் உரிமை உண்டு. தாய் எவ்வித தடையும் ஏற்படுத்தக் கூடாது” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு, பிரிந்து வாழும் பெற்றோருக்கு முக்கிய வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. குழந்தைகளின் மனநலன் மற்றும் உடன்பிறப்புகளுடனான உறவைப் பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!