தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்பநல நீதிமன்றத்தில் இன்று (07.08.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முன்னதாகக் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இரு தரப்பிலும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டு, காணொலி (Video Conference) மூலமாக விசாரணை நடத்தக் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில், சங்கீதா தரப்பில் காணொலி வாயிலாக ஆஜராகி நீதிபதி சுஜாதா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதேவேளையில், தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சமரசமா? சட்டப் போராட்டமா?... முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!
சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ஜீவனாம்சம் கோரியும், சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையைக் கோரியும் சங்கீதா தரப்பில் முறையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது.
இதையும் படிங்க: திமுக, அதிமுக, விசிக தலைவர்கள் ஒரே அணியில்! முதல்வர் விஜய் அமைத்த மெகா கண்காணிப்பு குழு!