தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டம், தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகக் கூடும் அதிகாரப்பூர்வ அமைச்சரவை கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 10-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், அதன் பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அமைச்சரவையை விரிவுபடுத்தினார். தற்போது 33 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைச்சரவை கொண்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பலரும் முதல் முறையாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களின் துறைசார் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள், இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து முதலமைச்சர் விஜய் தெளிவான உத்தரவுகளை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் தாமே முக்கியத் துறைகளான உள்துறை, காவல்துறை, பொது நிர்வாகம், இளைஞர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்டவற்றைத் தக்க வைத்துள்ளார். இந்தச் சூழலில் நடைபெறும் கூட்டம், புதிய அரசின் செயல்பாட்டுத் திசையைத் தீர்மானிக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: இது அதிக பிரசங்கித்தனம்! எங்களை யாரும் கேட்கல! பிரவீண் சக்ரவர்த்திக்கு சிபிஎம் கண்டனம்! கூட்டணி பெயரால் சர்ச்சை!
‘வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் தலைமைச் செயலகத்தில் CM விஜய்யின் முதல் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், டாஸ்மாக் நிர்வாகம் மறுசீரமைப்பு, மேகதாது, பயிர் கடன், தொழில் முதலீடு, புதிய திட்டங்கள், பட்ஜெட் கூட்டத்தொடர், முக்கிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு நாளிலேயே ஏகப்பட்ட கூத்து... குளறுபடி..! பொளந்தெடுத்த H. ராஜா..!!