முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கருவூருக்கு சென்றுள்ள முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் பங்கேற்றார். அப்போது பேசிய முதல்வர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கினார். நாம் வலிகள், காயங்கள் தாண்டி தான் வந்திருக்கிறோம் என்றும் ஆனால் அந்த காயங்கள் எல்லாவற்றையும் விட அதிகமாக நடந்தது கரூர் சம்பவத்தில் தான் என்று தெரிவித்தார். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் சில காயங்கள் மறக்காது என்றும் தெரிவித்தார்.
மக்களை சந்திக்க வேண்டும் என்று தாங்கள் சென்று கொண்டிருந்ததாகவும் அரியலூரில் நடந்த கூட்டத்தை முடித்துவிட்டு பெரம்பலூருக்கு செல்லும் பொழுது கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று எச்சரித்ததாகவும் அதனால் அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றதாகவும் கூறினார். ஆனால் கரூருக்கு வரும் பொழுது போலீஸ் தங்களை எச்சரிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தங்களை அவர்களே அங்கு கொண்டு போய்விட்டதாகவும் அவர்களுக்கு தான் நன்றி கூறியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய் இப்படி ஒரு நாடகம் நடக்கும் என்று தனக்கு தெரியாது என்று கூறினார்.

இதற்கெல்லாம் யார் காரணம் என்று யார் சொல்லி செய்தது எனவும் கேட்டார். அந்த சம்பவத்தில் யாரையெல்லாம் இழந்து இருக்கிறோம் என்று தெரியுமா என்று தனது வேதனையை வெளிப்படுத்திய முதல்வர் விஜய், விஜய் மாமா என்று மழலை கூட வராத குழந்தையை இழந்திருப்பதாக வருந்தினார். தன் அக்கா தங்கைகளின் பிள்ளைகளை இழந்து இருப்பதாக கூறினார். தன் மீது பழியை போடுவதாக கேள்வி எழுப்பினார். இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது என்றும் ஏன் எதனால் என்று தெரியாமல் வலியோடு வீட்டில் இருக்கும் பொழுது ஓடி ஒளிந்து கொண்டதாக பேசுவதாகவும் தெரிவித்தார். வாய்னு ஒன்னு இருந்தா எப்படி வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்ட முதல்வர் விஜய், அப்போது அதற்கு தகுந்தாற்போல் போலீஸ் பாதுகாப்பு இருந்ததா என்று கேட்டார்.
இதையும் படிங்க: நெசவாளர் நெஞ்சம் குளிர...! முதல்வர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. புகழ்ந்து வரவேற்ற அமைச்சர் விஜயலட்சுமி..!!
இவ்வளவு காயங்களை கொடுத்து விட்டு தங்கள் மீது பழியை போடுவார்கள் என்றும் அதனை அரசியல் செய்வார்கள் என்றும் தெரிவித்தார். சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் பழி போட்டு விட்டதாக தெரிவித்தார். ஆதாயம் தேடும் அரசியல்வாதி தான் கிடையாது என்று தெரிவித்த முதல்வர் விஜய், தனக்காக எல்லாம் கொடுத்த மக்களுக்காக எல்லாவற்றையும் விட்டு மக்களுக்காக வந்தவன் என்று குறிப்பிட்டார். எழுந்து கொள்ளவே முடியாத அளவுக்கு அவர்களுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை நகரமா..? மக்களை ஒழுங்கும் நரகமா..? மரண வலை..! கொந்தளித்த வேல்முருகன்..!!