தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. ஆட்சி, அதிகாரத்தில் அங்கு கேட்காமல் வெளியில் இருந்து ஆதரவு தர முடிவெடுத்துள்ளது. தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.

பெரும்பான்மை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தின் இணை மாநில செயலாளர் நிர்மல் குமார் பெற்றுக்கொண்டார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காமல் வெளியில் இருந்து ஆதரவு தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!
காலையில் இருந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்திருப்பது விஜய் முதலமைச்சர் ஆவதற்கு முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!