தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தின் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை விஜய்யின் சொந்த வேண்டுகோளின் பேரில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.
சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய்யின் வீட்டுக்கு முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது தவெக முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து, ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால், வீட்டைச் சுற்றிய பகுதிகளில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மெட்டல் டிடெக்டர்கள், பேரிகார்டுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஏற்பாடுகள் பொதுமக்களின் அன்றாட நடமாட்டத்தை பாதித்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு திடீரென மாற்றம் ஏற்பட்டது. விஜய் பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. விஜய் தனது சொந்த காரில் மட்டும் நீலாங்கரை வீட்டுக்கு சென்றார். இன்று காலையில் வீட்டின் முன்பு இருந்த அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக அகற்றப்பட்டன. மெட்டல் டிடெக்டர்கள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டதால், அப்பகுதியில் அமைதி நிலவத் தொடங்கியது.
இதையும் படிங்க: எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்! இப்பிடி ஏமாத்திட்டீங்களே!? காங்., எம்.எல்.ஏ - எம்.பி-யை வறுத்தெடுத்த திமுக தொண்டர்!
இந்த நிலையில் விஜய் கேட்டுக் கொள்ளப்பட்டதால் தான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக ctr நிர்மல் குமார் தெரிவித்தார். பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாவதால் இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளார் என்றும் தேவைப்படும்போது பாதுகாப்பு வழங்கினால் போதும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக - அதிமுக கூட்டு வச்சாலும் விஜய்தான் CM!! மறுதேர்தலே சிறந்த வழி!! ஸ்ரீதர் வேம்பு அதிரடி!