காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசியதாவது: காவிரி உரிமையை மீட்க முதலில் குரல் கொடுத்த இயக்கம் தேமுதிக. முதல் முறையாக தேமுதிக எம்எல்ஏ, எம்பி ஆன பிறகு நடக்கும் முதல் போராட்டம். ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகு என் பேச்சு, ஆர்ப்பாட்டத்தில் தான் தொடங்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த அனுபவமில்லாத ஆட்சி பற்றி பேசப்போறோம்.
காவிரி பிரச்சினையில் எத்தனை ஆட்சியாளர்கள் வந்தாங்க. எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மாற்றம் வேண்டும் என மக்கள் மாற்றத்தௌ கொடுத்தாங்க. ஆனால் இப்பவும் மாற்றம் இல்லை. ஏமாற்றம் தான். கர்நாடக முதல்வரும் புதுசு தான். ஆனால் அவர்களுக்கும் ஏமாற்றம் தான்.
கர்நாடக மக்கள் தண்ணீர் தராமல், செல்பீஸ்-ஆக இருப்பதால், ஒகேனக்கல்லில் ஒரு பிஷ்ம் இல்லை. காவிரி தொடக்கம் கர்நாடகவாக இருந்தாலும், முடிவும் அதிக தொடவு கடப்பது தமிழ்நாடு தான். இந்த உரிமை தமிழ்நாட்டுக்கு தான்.
இதையும் படிங்க: அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் மிக்கப் பெரிய போராட்டம் நடத்தியது. நீட்டுக்கு போராட்டம் நடத்தும் காக்ரோச் ஜனதா கட்சி, தண்ணீருக்கு ஏன் போராட்டம் நடத்த வரல.
இன்று சென்னைக்கு வந்த ராகுல்காந்தி, பெங்களூரில் காங்கிரஸ் ஆட்சியமைக்க டிபன் சாப்டுறார். நீட்டுக்கு சட்டையை கிழித்துவிட்டு போறாடுறார். ஆனால் தண்ணீருக்கு ஏன் வரல. திமுக போட்ட பிசாசையால், வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெகவுக்கு-வுடன் கூட்டணி. ஆனால் கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சி தானே. நாம் முதலில் பாஜகவை கேட்பதை விட, காங்கிரஸ்சை தான் கேட்க வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் போட்டோ சூட் நடத்துவதாக தவெகவும், விஜயும் சொன்னார்கள். இன்று கோட்டு சூட்டு, கண்ணாடி போட்டு ஆய்வு செய்கிறார். நானும் தான் கோட்டு சூட் போடுவேன். வேட்டைக்காரன் வரார் ஓடு, ஓடு, ஓடு, வேட்டைக்காரன் வாரான் பாரு என விஜய் பாடினாரு. நீங்க தான் வேட்டைக்காரன் ஆச்சே. கர்நாடகாவை நோக்கி ஓட வேண்டியதுதானே, நீங்க தானே வேட்டைக்காரன்.
இதையும் படிங்க: சிரிச்சிக்கிட்டே எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்... கடும் சீற்றத்துடன் கொதித்தெழுந்த ஆர்.பி.உதயகுமார்...!