செங்கல்பட்டில் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் சீண்டல் செய்த சிவா மற்றும் அதனை வீடியோ எடுத்த வேலு ஆகிய இருவரையும் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற பாலியல் குற்றங்கள் நடந்து வருவது பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதே அச்சமூட்டும் வகையில் இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். பிஞ்சு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் மனதை உலுக்குகிறது. இரண்டு வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை வயது வித்தியாசம் பாராமல் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேர்ந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செய்யுரை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி திமுக பிரமுகர் சிவா என்பவர் பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!
அப்போது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறவே மேல்மருவத்தூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திமுகவில் கிளை கழக பொறுப்பில் உள்ள சிவா தன் மகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிவா மற்றும் சிறுமையை வீடியோ எடுத்த வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!