"எங்கோ அடித்தால் யாருக்கோ வலிக்கும்" என்பார்கள். இன்று தமிழகத்தில் நடப்பதும் அதுதான். திமுகவின் சட்டவிரோதச் செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் நாம் தகுந்த ஆதாரங்களோடு கேள்வி கேட்கும் போது, ஆளுங்கட்சியின் அடிமட்டம் முதல் மேலிடம் வரை அதிர்ந்து போகிறார்கள் என தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், உண்மையை மறைக்கப் பல்வேறு "அரசியல் தரகர்களை" ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தத் தரகர்கள் இன்று களத்தில் குதித்துச் செய்யும் நகைச்சுவைகளைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளது.
திசைத்திருப்பும் நோக்கில் அவர்கள் எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது என்றும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் இந்த வாட்சப் யூனிவர்சிட்டி கோமாளிகளை மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப் படுவதாக கூறப்பட்டுள்ளது.

யார் குரைத்தாலும், யார் நம்மை வம்புக்கு இழுத்தாலும் நாம் சலனப்படப் போவதில்லை எனவும் அவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாமும் அதே பாணியில் பதில் அளிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் கூறியது. "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்றும் தமிழக அரசியல் மாற்றத்திற்கான விசிலோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது என்றும் அது சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!
எத்தனை தரகர்கள் பொய் பிரச்சாரங்களுடன் ஏவப்பட்டு குறுக்கே நின்றாலும், நீதியின் பாதையில் நமது பயணம் தொடரும்., வன்ம வாடகை வாய்களை, சகல கட்சி அரசியல் தரகர்களை புறந்தள்ளுங்கள் என்றும் மக்களுக்கான பிரச்சினைகளை மட்டுமே கவனம் செலுத்தி களமாடுவோம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!