மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி பாடலுக்கு விஜய் நடனமாடிய வீடியோவைப் பகிர்ந்து, திமுக ஐடி விங் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது விஜய் வெளிப்படுத்திய சோகத்தை கேலி செய்யும் வகையில், “ஆமா நீங்க சோகமா இருந்தது தான் உலகத்துக்கே தெரியுமே” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், விஜய்யின் ஆடியோ லான்ச், சீமந்தம், பிறந்தநாள் கேக் கட்டிங், புதுமனை புகுவிழா, கல்யாண வீடு உள்ளிட்ட சந்தோஷ நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, “ஏக்கப்பட்ட சோக காட்சியை பாத்தோமே” என குறிப்பிட்டுள்ளது. மேலும், கவுண்டமணி - சத்யராஜ் நடித்த ‘அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’ என்ற காமெடி புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளது. இந்த விமர்சனம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர், விஜய் தனது தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு பயணத்தின்போது கரூர் வெண்ணெய்மலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை விளக்கி ஆவேசமாக பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது: “மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்காகவே இந்த பயணத்தைத் தொடங்கினேன். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றோம். அரியலூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு பெரம்பலூருக்கு செல்லும் முன், அங்குள்ள போலீசார் கூட்டம் அதிகமாக இருப்பதால் வர வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கரூரில் CM விஜய் மாஸ் மூவ்... 31 அரசு வேலைக்கான ஆணை..! பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி..!
மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து அந்த இடத்திற்கு செல்லாமல் திரும்பிவிட்டோம். பின்னர் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டோம்.ஆனால் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு செல்லும்போது, கரூர் போலீசார் எங்களுக்கு எந்த அலர்ட்டும் தெரிவிக்கவில்லை. ‘கூட்டம் அதிகம், வராதீர்கள்’ என்று சொல்லியிருக்கலாம். போலீசால் எந்த கூட்டத்தையும் ரத்து செய்ய முடியும். ஆனால் அவர்கள் நெடுஞ்சாலையில் இருந்து வேலுச்சாமிபுரம் வரை எங்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.
https://x.com/DMKITwing/status/2075502435834204487/video/1
‘எங்களை கொண்டு வந்து சேர்த்த காவல்துறைக்கு நன்றி’ என்று கூட அங்கு பேசினேன். இப்படி ஒரு நாடகம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்றார். மேலும், “இதற்கு யார் காரணம்? யார் உத்தரவு கொடுத்து அழுத்தம் பிரயோகித்தார்கள்? என் மீது பழி சுமத்த முயற்சிக்கிறார்கள். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட வலியோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டதாக சொல்கிறார்கள். வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்” என விஜய் வலியுடன் தெரிவித்திருந்தார்.
இந்த விளக்கத்தை திமுக ஐடி விங் தங்களது விமர்சனத்துக்கு அடிப்படையாகக் கொண்டு, விஜய்யின் மலேசியா நடன வீடியோவை பயன்படுத்தி அவரை கிண்டல் செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: சொன்னதை செய்த விஜய்..! 31 பேருக்கு அரசு வேலை..! பரபரக்கும் கரூர்..,!!