மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைத்து தளபதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி என்றும், பெண்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தவர், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் பித்தலாட்டக்காரர்கள் எனவும், அதிமுகவினர் சுயநலவாதிகள் என தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்று அதிமுக எதிர்கட்சியாக அமைந்தாலும் அதையும் பாரதிய ஜனதா கட்சி சதி திட்டம் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாரதிய ஜனதாவே எதிர்க்கட்சியாக அமையும் என குற்றம் சாட்டியவர், பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் உரையாற்றுவது மரபு எனவும் அதைச் செய்யாமல் பிரதமர் மோடி தனது கடமையிலிருந்து தவறிவிட்டார் எனவும் குற்றம் சாட்டினார். தேமுதிக கூட்டணிக்காக விசுவாசம் இன்றி இரண்டு கட்சிகளிடமும் பேசி வருவதாகவும் அது சரியான நடைமுறை அல்ல எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானத்தில் பேசியிருக்க வேண்டும் எனவும் கவர்னர் உரைக்கு சட்டசபையில் முதலமைச்சர் நன்றி தெரிவித்து பேசுவது மரபு என்றும் அதனைப் போல் பாராளுமன்றத்திலும் பிரதமர் உரையாற்றி இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாமல் மோடி தனது கடமையில் இருந்து தவறி விட்டார் என்றும் தெரிவித்தவர் தேமுதிக குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது ஒரு கட்சியே அல்ல எனவும் பெரிய கட்சிகள் குறித்து பேசுங்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!
இதையும் படிங்க: இபிஎஸ் இப்படி பண்ணலாமா? தேமுதிகவை கைவிடுவது சரியா? அதிமுக மாவட்ட செயலாளர்கள் அப்செட்!