சென்னையில் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களானது தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேற்காசிய நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் எதிரொலியாக சென்னையிலிருந்து மூன்றாவது நாளாக விமான போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னைக்கு வந்து செல்லும் 36 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. பிரிட்டன் அமெரிக்காவிலிருந்து வரும் விமானங்கள் மாற்று வழியில் இயக்கம் என்றும் தகவலானது வெளியாகி இருக்கிறது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை தொடுத்து வருவதால் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் துபாய், கத்தார், அபுதாபி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதலையும் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து மூன்றாவது நாளாக விமான போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஈரானை நோக்கி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தக்கூடிய யுத்தம் என்பது தீவிரம் அடைந்திருக்கின்றது. பல்வேறு வகையான ஏவுகணைகளை செலுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்ன. இந்த மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வரக்கூடிய நிலையில், மூன்றாவது நாளாக உலகளவில் விமான போக்குவருத்து பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இதையும் படிங்க: என்னாச்சு..?? - ஹெச்.ராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... ICU-வில் தீவிர சிகிச்சை...!
சென்னையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லக்கூடிய பல்வேறு விமானங்களின் சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து செல்லக்கூடிய 36 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரக்கூடிய விமானங்கள் வளைகுடா நாட்டினுடைய வான்வெளியைப் பயன்படுத்தாமல் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் தொடுத்து வரக்கூடிய நிலையில்போர் பதற்றம் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டே இருக்கின்றது. அதன் அடிப்படையில் வளைகுடா நாடுகளான மேற்காசிய பகுதியிலே அமெரிக்க ராணுவ நிலைகள் மற்றும் இஸ்ரேல் நாட்டினுடைய பகுதிகள் மீதும் ஈரானும் பதில் தாக்குதலை தொடுத்து வருகின்றது.
இந்தியர்கள் அதிகம் வாழக்கூடிய வளைகுட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது. துபாய், கத்தார், அபுதாபி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ச்சியான தாக்குதலை நடத்துகின்றது. ஈரானினுடைய தாக்குதல் காரணமாக துபாய், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடைய வான்வெளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஈரான் தாக்குதல் எதிரொலி காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து மீண்டும் ஒருமுறை முடங்கி இருக்கின்றது.
சென்னையை பொறுத்தவரை துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் செல்லக்கூடிய 18 விமானங்களும் அங்கிருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்களும் ரத்தாகி இருக்கின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து செல்லக்கூடிய விமானங்களின் சேவை மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. எனவே சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகின்றது நிறைய பேர் தமிழகத்தில் இருந்து பயணம் செய்யக்கூடியவர்கள் வளைகுடா நாடுகளுக்கு தான் செல்வார்கள். கேரள மக்கள் கூட பெரும்பாலும் சென்னையை பயன்படுத்தி வளைகுடா நாடுகளுக்கு செல்லக்கூடியவர்களும் இருக்கின்றார்கள். எனவே வலைகுடா நாடுகளுக்கான விமான போக்குவரத்து சென்னையில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கின்றது.
வளைகுடா நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வரக்கூடிய 18 விமானங்கள் மற்றும் சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லக்கூடிய 18 விமானங்கள் என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவிலே துபாய் என்பது முக்கியமான ஒரு வான்வெளியாக இருக்கும். துபாய் மிகப்பெரிய விமான நிலையங்களை கொண்டிருக்கக்கூடிய பகுதி. அங்கிருந்துதான் கிழக்கு மேற்கு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்து திசை மாற்றம் செய்யப்படும். ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக துபாய் வான்வெளி மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலான விமான சேவை முடக்கப்பட்டிருக்கின்றது.
ஈரானினுடைய ஏவுகணைகள் துபாய் விமான நிலையத்தை குறி வைத்திருக்கின்றன என்ற தகவல் வெளியாகி வருவதால் சர்வதேச அளவிலான பயணிகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தாமல் மாற்று வான்வழியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் இழுபறி... விடிந்ததுமே இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!