எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது கண்டிக்கத்தக்கது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆனால் அவர் மீதான கைது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது முதலமைச்சர் விஜய்யை ‘டம்மி முதல்வர்’ எனக் குறிப்பிட்டு பேசினார். அதுமட்டுமில்லாத முதல்வர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கண்டனங்கள் வலுத்தன. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி உதயநிதி பேசுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில் உதயநிதியை கைது செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் அதிமுகவில் அதகளம்..! EPS அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை..! வேலுமணி தரப்பு கூட்டாக அறிவிப்பு..!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பெண்களை இழிவாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார். உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை பல ஆண்டுகளாக தாங்கள் கூறி வருவதாகவும் குறிப்பிட்டார். உதயநிதி பேசியது தவறு என்பதை சுட்டி காட்டிய எடப்பாடி பழனிச்சாமி அவர் மீதான கைது நடவடிக்கையும் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். நாளை சட்டப்பேரவை கூட்டத்துடன் நடப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!