கடத்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வால்பாறை எம்எல்ஏ அமுலுக்கு கந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவர் கோமா நிலைக்குச் சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. T.K. அமுல்கந்தசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இதையும் படிங்க: #BREAKING: வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்..! சோகத்தில் மூழ்கிய அதிமுக தொண்டர்கள்..!
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!