ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அப்போது, திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மின் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்டவை திமுக ஆட்சியில் கடுமையாக உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி அமைந்த உடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்துள்ளார். மீனவர்களுக்கான நிவாரணம் 8000 ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்டுள்ள விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!
வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறினார். தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட் ஆக உயர்த்தி வணங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து 1400 யூனிட் ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணியா? விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்துட்டு வர சொல்லுங்க..!! ஆர் எஸ் பாரதி பதிலடி..!!