.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் காரைக்குடி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி திருப்பத்தூர் மானாமதுரை பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், சிவகங்கை வீரம் செறிந்த இந்த மண்ணுக்கு என்று பெருமை உண்டு . வேலுநாச்சியார் ,மருது பாண்டியர் ,வாளுக்கு வேலி ,குயிலி போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாழ்ந்த பூமி இந்த பூமியில் பேச இறைவன் அளித்த வரம் பாக்கியம் என்றார். அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்று ஆளுங்கட்சி எம்எல்ஏவாக ஆக்க வேண்டும் என்றார் ஆக்குவீர்களா என்று கேள்வி எழுப்பினார் . இந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு வடமாடு வீர விளையாட்டு. எங்கெல்லாம் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடக்கிறதோ அவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கப்படும் . தற்போதுள்ள ஆன்லைன் முறையை ரத்து செய்து பழைய முறையில் நடத்தப்படும் என்றார்.
ஜல்லிக்கட்டில் படுகாயம் அடைந்து உயிரிழந்தால் பத்து லட்சம் வழங்கப்படும் என்றார். அதேபோல ஜல்லிக்கட்டுக்கு காப்பீட்டு தொகையை அரசே கட்டும் என தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமியை சங்கி என்கிறார்கள் . உங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை கெஞ்சி கூட்டணியில் வைத்துள்ளார்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் வாஜ்பாய் உடன் இருப்பதை சுட்டிக்காட்டி அப்ப இவர்களும் சங்கியா என்று கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் தொடரட்டும்"... "தமிழ்நாடு வெல்லட்டும்"... திமுகவின் பிரச்சார பாடல் வெளியீடு..!!
காங்கிரஸ் கட்சியை டெல்லிக்கு சென்று கனிமொழி பேசி வருவது சங்கீயா என்று கேள்வி எழுப்பினர் . பதவிக்கு ஏற்று ஸ்டாலின் பேச வேண்டும் இல்லையெனில் தொண்டர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறினார் . இபிஎஸ் கையில் ரத்தக் கரை படிந்துள்ளது என்கிறார் என் கை சுத்தமா இருக்கிறது என்றார் . ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் 18000 குழந்தைகள் பாலியல் சீண்டல்கள் உட்பட்டுள்ளார்கள் . 6999 போக்ஸோ வழக்கு போடப்பட்டுள்ளதாக ஒரு அமைச்சரே கூறுகிறார்.
சிறு பிள்ளைகள்.பெண்கள் வயதானவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சி நடைபெறுகிறது என்றார் உங்கள் ஆட்சிகள் சட்டம் சந்து சிரித்துக் கொண்டிருக்கிறது.
திமுக வேண்டுமென்று திட்டமிட்டு அவதூறு பரப்பினால் தொண்டர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார் . சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற லாக்கப் டெத், திருப்புவனம் கோவில் காவலாளி கொலை, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றார்.
சட்டம் ஒழுங்கு டிஜிபியை கூட நியமிக்க முடியாத அரசு திமுக அரசு என்று குற்றம் சாட்டினர் அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் அறவே போதை பொருள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்றார். எதிர்க்கட்சித் தலைவராக முதல்வரின் கவனத்திற்கு கஞ்சா அமோகமாக விற்பதாக ஆர்ப்பாட்டம் ஊடகம் மூலமாக கூறியும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கெல்லாம் முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என்றார் . அதிமுக ஆட்சியில் 3 லட்சத்து ஐயாயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
திமுக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினர். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் இடம் கட்டுமானம், நிதி ஆதாரம் வந்தால் தான் முழுமை பெறும் இதற்கெல்லாம் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும். திமுக போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன் கிடைத்ததா? என்றார் . திமுக ஆட்சியில் போட்டோ சூட் எடுத்து போடுவது மட்டும்தான் சாதனை திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் பரிசு தர வேண்டும் என்றவர் நாள் ஒன்றுக்கு நாலு கோடி ரூபாய் விளம்பரம் செய்கிறார்கள் அதுவும் மக்கள் வரிப்பணத்தில் என்று குற்றம் சாட்டினர் .
திமுக தலைவர் கலைஞருக்கு எழுதாத பேனாவை கடலில் 84 கோடிக்கு செலவழிக்கிறார்கள் யார் பணத்தை யார் செலவழித்தது இதற்கு மாணவர்களுக்காவது பேனா கொடுக்கலாம் என்றார் . சென்னையில் கார்பந்தயம் தேவையா என்றவர் கோவில் பணத்தையும் விட்டு வைக்கவில்லை என்றவர் 167 கோடி கோவில் பணத்தில் 11 திட்டங்கள் செயல்படுத்தினார்கள். இதுவரை எந்த ஆட்சியிலும் கோவில் நகைகளை எடுத்து உருக்கவில்லை எவ்வளவு இருந்தது என்று கூட தெரியாது என்றவர் ஆண்டவன் கேட்பான் தக்க தண்டனை வழங்குவான் என்று கூறினர்.
ஐந்து ஆண்டில் 67 சதவீத மின் கட்டண உயர்வு நகராட்சியில் 100 சதவீத வரி விதிப்பு குடிநீருக்கு வரி குப்பைக்கு வரி திமுக அரசு மக்கள் மீது வரிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றார் . விவசாயிகள் நிறைந்த இந்த பகுதியில் அதிமுக விவசாயிகளுக்காக ஏராளமாக செய்துள்ளதாக குறிப்பிட்டார் இந்தியாவிலே அதிக அளவில் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு பணத்தை பெற்று சென்றது அதிமுக அரசு என்றார் . திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியில் 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை என்று கூறியவர் இந்த முறை அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து திமுக வெளியிட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: எத்தன உருட்டு..? தேர்வு நடத்த கூட "வக்கற்ற திமுக அரசு"... விளாசிய அதிமுக..!